ரஜினி, கமல் கூட்டணி படம் : பிரதீப் ரங்கநாதன் பதில் | விஜய் ஆண்டனியின் அடுத்தபடம் பற்றிய தகவல் | நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் |
அண்ணாத்த, சாணிக்காயிதம் மற்றும் மகேஷ் பாபுவுடன் சர்காரு வாரி பாட்டா ஆகிய படங்களில் நடித்து வருகிறார் கீர்த்தி சுரேஷ். இந்நிலையில் சமீபத்தில் ஒரு தொழிலதிபரை அவர் திருமணம் செய்து கொள்ளப்போவதாக அவரைப்பற்றி ஒரு பரபரப்பு செய்தி வெளியானது.
இந்நிலையில் கீர்த்தி சுரேஷ் அளித்த ஒரு பேட்டியில், நான் தொழிலதிபரை திருமணம் செய்து கொள்ளப்போவதாக சமீபத்தில் ஒரு செய்தி வெளியானது. அதைப்பார்த்து எனக்கு சிரிப்பு தான் வந்தது. காரணம் திருமணம் செய்து கொள்வது பற்றி நான் இப்போதுவரை யோசிக்கவே இல்லை. அதோடு எனது திருமணத்திற்கு இப்போது அவசரமில்லை. அதற்கு இன்னும் நிறைய காலம் உள்ளது. இப்போதைக்கு எனது முழு கவனமும் சினிமாவில் தான் உள்ளது. எனது கேரியரில் பெரிதாக ஏதேனும் சாதிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். அதனால் அதை நோக்கித்தான் எனது எண்ணமும், சிந்தனையும் சென்று கொண்டிருக்கிறது என்று கூறியுள்ளார் கீர்த்தி சுரேஷ்.