உதய்ப்பூர் புகைப்படங்களை தனித்தனியே பகிரும் விஜய் தேவரகொண்டா ராஷ்மிகா | புது முகங்களின் 'ஹைக்கூ ' | 'காந்தாரா' வழக்கு ரத்து செய்ய ரன்வீர் சிங் மனு | சென்னையில் மீண்டும் சிம்பொனி இசை நிகழ்ச்சி நடத்தும் இளையராஜா | 'கல்கி 2' படப்பிடிப்பு அப்டேட் தந்த அமிதாப் பச்சன் | பிளாஷ்பேக் : டப்பிங் கலைஞர் பாரதிராஜா | பிளாஷ்பேக் : தமிழ் படத்தை தணிக்கை செய்த ஜவஹர்லால் நேரு | ஜமா இயக்குனரின் அடுத்த படம் நிறைவு | ரஜினி படப்பிடிப்பு எப்போது : சிபி சக்கரவர்த்தி சொன்ன பதில் | படங்கள் இல்லை : சிங்கிள் தியேட்டர்களுக்கு மீண்டும் சிக்கல்… |

அண்ணாத்த, சாணிக்காயிதம் மற்றும் மகேஷ் பாபுவுடன் சர்காரு வாரி பாட்டா ஆகிய படங்களில் நடித்து வருகிறார் கீர்த்தி சுரேஷ். இந்நிலையில் சமீபத்தில் ஒரு தொழிலதிபரை அவர் திருமணம் செய்து கொள்ளப்போவதாக அவரைப்பற்றி ஒரு பரபரப்பு செய்தி வெளியானது.
இந்நிலையில் கீர்த்தி சுரேஷ் அளித்த ஒரு பேட்டியில், நான் தொழிலதிபரை திருமணம் செய்து கொள்ளப்போவதாக சமீபத்தில் ஒரு செய்தி வெளியானது. அதைப்பார்த்து எனக்கு சிரிப்பு தான் வந்தது. காரணம் திருமணம் செய்து கொள்வது பற்றி நான் இப்போதுவரை யோசிக்கவே இல்லை. அதோடு எனது திருமணத்திற்கு இப்போது அவசரமில்லை. அதற்கு இன்னும் நிறைய காலம் உள்ளது. இப்போதைக்கு எனது முழு கவனமும் சினிமாவில் தான் உள்ளது. எனது கேரியரில் பெரிதாக ஏதேனும் சாதிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். அதனால் அதை நோக்கித்தான் எனது எண்ணமும், சிந்தனையும் சென்று கொண்டிருக்கிறது என்று கூறியுள்ளார் கீர்த்தி சுரேஷ்.