ரஜினி வெளியிட்ட ‛வித் லவ்' | 100 மில்லியன் பார்வைகளை கடந்த ‛ஊரும் பிளட்' | கமல், ரஜினி இணையும் படம் : 'மகாராஜா' நித்திலன் இயக்குகிறாரா? | 50 ஆண்டுகளுக்குபின் 150வது நாளை கொண்டாடும் படம் எது தெரியுமா? | சிவகார்த்திகேயன் வளர்ச்சி எப்படி : கீர்த்தி சுரேஷ் சொன்ன பதில் | மாஸ்க் பட ரிசல்ட் நிலவரம் : ஆண்ட்ரியா வீட்டு நிலைமை? | அனைத்து மதங்களின் ரசிகன் நான் : ஏஆர் ரஹ்மான் | பிளாஷ்பேக்: விக்ரம் முதல் காட்சி வசூலை குழந்தைகளுக்கு கொடுத்த கமல் | பிளாஷ்பேக்: 70 ஆண்டுகளுக்கு முன்பே எழுந்த பாடல் சர்ச்சை | ஹீரோவான யு டியூபர் |

அண்ணாத்த, சாணிக்காயிதம் மற்றும் மகேஷ் பாபுவுடன் சர்காரு வாரி பாட்டா ஆகிய படங்களில் நடித்து வருகிறார் கீர்த்தி சுரேஷ். இந்நிலையில் சமீபத்தில் ஒரு தொழிலதிபரை அவர் திருமணம் செய்து கொள்ளப்போவதாக அவரைப்பற்றி ஒரு பரபரப்பு செய்தி வெளியானது.
இந்நிலையில் கீர்த்தி சுரேஷ் அளித்த ஒரு பேட்டியில், நான் தொழிலதிபரை திருமணம் செய்து கொள்ளப்போவதாக சமீபத்தில் ஒரு செய்தி வெளியானது. அதைப்பார்த்து எனக்கு சிரிப்பு தான் வந்தது. காரணம் திருமணம் செய்து கொள்வது பற்றி நான் இப்போதுவரை யோசிக்கவே இல்லை. அதோடு எனது திருமணத்திற்கு இப்போது அவசரமில்லை. அதற்கு இன்னும் நிறைய காலம் உள்ளது. இப்போதைக்கு எனது முழு கவனமும் சினிமாவில் தான் உள்ளது. எனது கேரியரில் பெரிதாக ஏதேனும் சாதிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். அதனால் அதை நோக்கித்தான் எனது எண்ணமும், சிந்தனையும் சென்று கொண்டிருக்கிறது என்று கூறியுள்ளார் கீர்த்தி சுரேஷ்.




