காமெடி முதல் கிரைம் த்ரில்லர் வரை : இந்த வார ஓடிடி ரிலீஸ்......! | வாரணாசி-க்கு பின்னணி இசை அமைப்பது எப்போது... : கீரவாணி கொடுத்த அப்டேட் | 'சர்வம் மாயா' நாயகிக்கு பாராட்டுடன் பரிசும் அனுப்பிய சூர்யா ஜோதிகா | நன்றி சொன்னார் எஸ்.பி.முத்துராமன் : கண்கலங்கினார் வி.சி.குகநாதன் | ஹனிரோஸுக்கு ஜிஎஸ்டி துறை அனுப்பிய நோட்டீசை தள்ளுபடி செய்த கேரள உயர்நீதிமன்றம் | நடிகர் ஜெயசூர்யாவின் 39 லட்சம் மதிப்புள்ள சொத்துக்களை முடக்கிய அமலாக்கத்துறை | கேரளா பிளஸ் 2 மாதிரி தேர்வில் மோகன்லாலின் சினிமா பயணம் குறித்து கேள்வி | அஞ்சு ரூபாய் டாக்டர் போன்ற கதாபாத்திரத்தில் நடிக்கும் மம்முட்டி | 'வேள்பாரி' வேலைகளில் தீவிரம் காட்டும் ஷங்கர் | பெரும் வரவேற்பைப் பெற்ற 'நாகபந்தம்' டீசர் |

கொரோனா இரண்டாவது அலையில் பிரபல நடிகர்களும், சின்ன இணை, துணை நடிகர்களும் உயிரிழந்துள்ளனர். இதனால் திரையுலகினர் அனைவரும் கட்டாயம் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார் பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில், ‛‛மே மாதம் 31-ந்தேதி வரை சினிமா, சின்னத்திரை படப்பிடிப்புகளை நிறுத்தி வைக்குமாறு கூறியுள்ளார். மேலும், வருகிற 31ந்தேதி அன்று ஒரு மீட்டிங் நடத்தி தொடர்ந்து படப்பிடிப்புகள் நடத்துவதா? இல்லை தள்ளி வைப்பதா? என்பது குறித்து முடிவெடுக்கப்படும் என்று அறிவித்துள்ள ஆர்.கே.செல்வமணி, இனிமேல் நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் யாராக இருந்தாலும் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டால் மட்டுமே படப்பிடிப்பு தளத்திற்குள் அனுமதிக்கப்படுவார்கள். போடாதவர்கள் அதற்கான உரிய காரணத்தை பெப்சிக்கு கடிதம் மூலம் தெரிவிக்க வேண்டும் என்று அந்த அறிக்கையில் அவர் தெரிவித்துள்ளார்.




