'கங்குவா' டிரைலரில் பாதி பார்வைகள் பெற்ற 'ரெட்ரோ' டிரைலர் | வரதட்சணை வாங்கி திருமணம் செய்து கொண்டேனா? ரம்யா பாண்டியன் கொடுத்த விளக்கம் | சிவப்பு நிறத்தில் புதிய கார் வாங்கிய ஏ. ஆர். ரஹ்மான்! | ‛போய் வா நண்பா': ‛குபேரா' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது! | இன்று திருமணம் செய்து கொண்ட பிக்பாஸ் காதல் ஜோடி அமீர்- பாவனி ! | காலேஜ் ரவுடியாக நடிக்கும் சிம்பு! | 'ஜிங்குச்சா' - இரண்டு நாளில் இருபது மில்லியன் | தனது இயக்குனர்களுக்காக ஒரு அறிக்கை வெளியிடுவாரா அஜித்குமார்? | ‛ஆன்டி' கதாபாத்திரம்: கொதித்த சிம்ரன் | பிடிகொடுக்காத நடிகரால் அதிருப்தியில் பிரமாண்ட இயக்குனர் |
கொரோனா இரண்டாவது அலையில் பிரபல நடிகர்களும், சின்ன இணை, துணை நடிகர்களும் உயிரிழந்துள்ளனர். இதனால் திரையுலகினர் அனைவரும் கட்டாயம் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார் பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில், ‛‛மே மாதம் 31-ந்தேதி வரை சினிமா, சின்னத்திரை படப்பிடிப்புகளை நிறுத்தி வைக்குமாறு கூறியுள்ளார். மேலும், வருகிற 31ந்தேதி அன்று ஒரு மீட்டிங் நடத்தி தொடர்ந்து படப்பிடிப்புகள் நடத்துவதா? இல்லை தள்ளி வைப்பதா? என்பது குறித்து முடிவெடுக்கப்படும் என்று அறிவித்துள்ள ஆர்.கே.செல்வமணி, இனிமேல் நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் யாராக இருந்தாலும் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டால் மட்டுமே படப்பிடிப்பு தளத்திற்குள் அனுமதிக்கப்படுவார்கள். போடாதவர்கள் அதற்கான உரிய காரணத்தை பெப்சிக்கு கடிதம் மூலம் தெரிவிக்க வேண்டும் என்று அந்த அறிக்கையில் அவர் தெரிவித்துள்ளார்.