காதல், கனவுகள், மனித தொடர்புகளை 'தோ தீவானே சேஹர் மெய்ன்' பேசும் : மிருணாள் தாக்கூர் | தயாரிப்பாளர்களை குழியில் தள்ளும் இயக்குனர்கள் : சேரன் பரபரப்பு பேச்சு | விஜய் பட நடிகைக்கு நேரில் ஆஜராக நீதிமன்றம் பிடி வாரண்ட் | மம்முட்டி வாங்கி கொடுத்த 'ஹியரிங் எய்டு' கருவியை கழட்டி வீசிய தொழிலாளி | 'டூரிஸ்ட் பேமிலி' பாணி கதையில் ஹிந்தியில் நடிக்கும் பிரியாமணி | நானாக வாய்ப்பு கேட்ட ஒரே இயக்குனர் இவர்தான் ; மிருணாள் தாகூர் | பிளாஷ்பேக் : அக்கா அளவுக்கு சாதிக்க முடியாமல் போன தங்கை | சினிமாவிற்கு வரும் புதிய இரட்டை இசை அமைப்பாளர்கள் | 10 கோடி செலுத்த காலஅவகாசம் கேட்ட விஷால் மனு தள்ளுபடி | கடும் போட்டியில் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தல் |

கொரோனா இரண்டாவது அலையில் பிரபல நடிகர்களும், சின்ன இணை, துணை நடிகர்களும் உயிரிழந்துள்ளனர். இதனால் திரையுலகினர் அனைவரும் கட்டாயம் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார் பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில், ‛‛மே மாதம் 31-ந்தேதி வரை சினிமா, சின்னத்திரை படப்பிடிப்புகளை நிறுத்தி வைக்குமாறு கூறியுள்ளார். மேலும், வருகிற 31ந்தேதி அன்று ஒரு மீட்டிங் நடத்தி தொடர்ந்து படப்பிடிப்புகள் நடத்துவதா? இல்லை தள்ளி வைப்பதா? என்பது குறித்து முடிவெடுக்கப்படும் என்று அறிவித்துள்ள ஆர்.கே.செல்வமணி, இனிமேல் நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் யாராக இருந்தாலும் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டால் மட்டுமே படப்பிடிப்பு தளத்திற்குள் அனுமதிக்கப்படுவார்கள். போடாதவர்கள் அதற்கான உரிய காரணத்தை பெப்சிக்கு கடிதம் மூலம் தெரிவிக்க வேண்டும் என்று அந்த அறிக்கையில் அவர் தெரிவித்துள்ளார்.




