ரஜினி, கமல் இணையும் படம்: லதா ரஜினிகாந்த் சொன்ன தகவல் | சமுத்திரக்கனி, கவுதம் மேனனின் 'கார்மேனி செல்வம்' புதிய ரிலீஸ் தேதி | மீண்டும் சிரஞ்சீவி படத்திற்கு இசையமைக்கும் தமன்! | என் போட்டோவை மார்பிங் செய்கின்றனர்!: ரச்சிதா ஆதங்கம் | ரொமான்டிக் திரில்லர் கதையில் உருவாகும் 'ஆசை' | 'கேம் ஆப் த்ரோன்ஸ்' புதிய தொடர் வெளியானது: உலகம் முழுக்க வரவேற்பு | 'மாஸ்டர் பிளான்' படத்தில் பொலிட்டிக்கல் பிளாக் காமெடி | வில்லனாக நடிக்க விரும்பும் முனீஷ்காந்த் | பிளாஷ்பேக்: 'நிழல்கள்' ராதுவை தெரியுமா? | பிளாஷ்பேக்: ஒரே படத்தில் 3 பேருக்கு வாழ்வளித்த கண்ணதாசன் |

அண்ணாத்த, சாணிக்காயிதம் மற்றும் மகேஷ் பாபுவுடன் சர்காரு வாரி பாட்டா ஆகிய படங்களில் நடித்து வருகிறார் கீர்த்தி சுரேஷ். இந்நிலையில் சமீபத்தில் ஒரு தொழிலதிபரை அவர் திருமணம் செய்து கொள்ளப்போவதாக அவரைப்பற்றி ஒரு பரபரப்பு செய்தி வெளியானது.
இந்நிலையில் கீர்த்தி சுரேஷ் அளித்த ஒரு பேட்டியில், நான் தொழிலதிபரை திருமணம் செய்து கொள்ளப்போவதாக சமீபத்தில் ஒரு செய்தி வெளியானது. அதைப்பார்த்து எனக்கு சிரிப்பு தான் வந்தது. காரணம் திருமணம் செய்து கொள்வது பற்றி நான் இப்போதுவரை யோசிக்கவே இல்லை. அதோடு எனது திருமணத்திற்கு இப்போது அவசரமில்லை. அதற்கு இன்னும் நிறைய காலம் உள்ளது. இப்போதைக்கு எனது முழு கவனமும் சினிமாவில் தான் உள்ளது. எனது கேரியரில் பெரிதாக ஏதேனும் சாதிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். அதனால் அதை நோக்கித்தான் எனது எண்ணமும், சிந்தனையும் சென்று கொண்டிருக்கிறது என்று கூறியுள்ளார் கீர்த்தி சுரேஷ்.




