தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் | ஜனநாயகனை விட பராசக்திக்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா? - திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | நீலாம்பரி போல கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பேன் ; நமீதா விருப்பம் | நாய்களை விலைக்கு வாங்காதீர்கள்.. தத்தெடுங்கள் ; ஷாலினி பாண்டே கோரிக்கை | படங்களின் லாப நட்ட கணக்கை ஏன் வெளியே சொல்ல வேண்டும் ? நிவின்பாலி கேள்வி | விஜய் இதை பார்த்தால் நிச்சயம் ரசிப்பார் ; மோகன்லால் கொடுத்த கிரீன் சிக்னல் | கர்மா பற்றி எனக்கு பாடம் எடுக்காதீர்கள் ; நடிகர் விநாயகன் காட்டம் | 2025ல் வெளியான நேரடி தமிழ்ப் படங்கள் பட்டியல்... |

நடிகர் ரஜினிகாந்த் தற்போது நெல்சன் இயக்கத்தில் 'ஜெயிலர் 2' படத்தில் நடித்து வருகிறார். அடுத்ததாக ரஜினிகாந்த், கமல்ஹாசன் கூட்டணியில் புதிய படம் உருவாவதாக அறிவித்தாலும், இன்னும் கதை, இயக்குனர் முடிவாகவில்லை என ரஜினியே கூறியிருந்தார். இதற்கிடையில் ரஜினி குறுகிய கால கட்டத்தில் ஒரு படத்தில் நடிக்க திட்டமிட்டிருந்தார். அப்படத்தை கமல் தயாரிப்பதாகவும் அதற்கான அறிவிப்பு கமல் பிறந்தநாளான நவ.,7ல் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், இன்றே (நவ.,5) அதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, இந்தப் படத்தை தொடர்ந்து ரஜினி நடிக்கும் படத்தை சுந்தர்.சி இயக்குகிறார். இந்தப் படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கிறது. இது தொடர்பான அறிவிப்பை கமல் வெளியிட்டுள்ளார்.
இந்தப் படம் வரும் 2027ம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகும் என்றும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக கமல்ஹாசன் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “காற்றாய் மழையாய் நதியாய் பொழிவோம் மகிழ்வோம் வாழ்வோம்! ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பில் சுந்தர்.சி இயக்கத்தில் இனிய நண்பர் ரஜினிகாந்த் நடிக்கும் 'தலைவர் 173'' எனப்பதிவிட்டுள்ளார்.