தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் | ஜனநாயகனை விட பராசக்திக்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா? - திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | நீலாம்பரி போல கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பேன் ; நமீதா விருப்பம் | நாய்களை விலைக்கு வாங்காதீர்கள்.. தத்தெடுங்கள் ; ஷாலினி பாண்டே கோரிக்கை | படங்களின் லாப நட்ட கணக்கை ஏன் வெளியே சொல்ல வேண்டும் ? நிவின்பாலி கேள்வி | விஜய் இதை பார்த்தால் நிச்சயம் ரசிப்பார் ; மோகன்லால் கொடுத்த கிரீன் சிக்னல் | கர்மா பற்றி எனக்கு பாடம் எடுக்காதீர்கள் ; நடிகர் விநாயகன் காட்டம் | 2025ல் வெளியான நேரடி தமிழ்ப் படங்கள் பட்டியல்... |

கேஜிஎப் படத்தில் இரண்டு பாகங்களின் அடுத்தடுத்த வெற்றியைத் தொடர்ந்து தற்போது நடிகர் யஷ் நடித்து வரும் படம் 'டாக்ஸிக்'. நடிகையும் தேசிய விருது பெற்ற இயக்குனருமான கீத்து மோகன்தாஸ் இந்த படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் நயன்தாரா, கியாரா அத்வானி, ஹூமா குரேஷி, ருக்மணி வசந்த் ஆகியோர் கதாநாயகிகளாக நடித்து வருகின்றனர்.
கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பே துவங்கப்பட்ட இந்த படத்தின் படப்பிடிப்பு அவ்வப்போது சில பிரச்னைகளால் தொடர்ந்து தாமதமாக நடைபெற்று வருகிறது. வரும் மார்ச் 14ம் தேதி இந்த படம் ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் சமீப காலமாக இந்த படத்தின் படப்பிடிப்பு தளத்தில் பல காட்சிகள் திரும்பத் திரும்ப எடுக்கப்பட்டதாக ஒரு தகவல் வெளியானது.
இதன் பின்னணியில் இயக்குனர் கீது மோகன்தாஸுக்கும் நடிகர் யஷ்ஷுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாகவும் இதனால் மீதி இருக்கும் படத்தை நடிகர் யஷ்ஷே இயக்க தீர்மானித்திருப்பதாகவும் தற்போது ஒரு தகவல் கன்னட திரை உலகில் பேசப்பட்டு வருகிறது. இங்கே தமிழில் கூட நடிகர் விஷால், தான் நடித்து வந்த 'மகுடம்' திரைப்படத்தின் இயக்குனர ரவி அரசுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் தற்போது மீதி திரைப்படத்தை தானே இயக்கி வருகிறார். அதே பாணியில் இயக்குனர் யஷ் கையில் எடுப்பாரா என்பது இன்னும் சில நாட்களில் தெரிந்து விடும்.