வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி | குருநாதருக்கு நன்றி செலுத்தும் மிஷ்கின் | அடுத்த ஆண்டாவது ஒலிக்குமா என் இனிய தமிழ் மக்களே | கூலி படத்துக்கு விமர்சனம் : மவுனம் கலைத்த லோகேஷ் கனகராஜ் | தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் | ஜனநாயகனை விட பராசக்திக்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா? - திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | நீலாம்பரி போல கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பேன் ; நமீதா விருப்பம் |

சிக்கந்தர் படத்திற்கு பிறகு சிவகார்த்திகேயன் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி வெளியான படம் மதராஸி. ஆக்ஷன் கதைக்களத்தில் உருவான இந்த படம் கலவை விமர்சனங்களை சந்தித்தது. இதுவரை 80 கோடிக்கு மேல் வசூலித்திருப்பதாக பாக்ஸ் ஆபீஸ் தகவல் தெரிவிக்கிறது. இந்த நிலையில் மீண்டும் ஒரு ஆக்ஷன் கதையை இயக்கத் திட்டமிட்டுள்ள ஏ.ஆர்.முருகதாஸ் அந்த கதையை சமீபத்தில் சிவகார்த்திகேயன் இடத்தில் சொல்லி கால்ஷீட் கேட்டுள்ளார். ஆனால் அவரோ, பராசக்தி படத்திற்கு பிறகு தான் மூன்று இயக்குனர்களுக்கு கால்சீட் கொடுத்ததை சொல்லி அந்த படங்களுக்கு பிறகு தான் நடிக்க முடியும் என்று கூறிவிட்டாராம். இதனால் அதுவரைக்கும் சிவகார்த்திகேயனுக்காக காத்திருக்கலாமா? இல்லை வேறு ஹீரோக்களின் கால்சீட் கிடைத்தால் அவர்களை வைத்து இந்த புதிய படத்தை இயக்கலாமா? என்கிற ஆலோசனையில் இருந்து வருகிறார்.