சிரஞ்சீவியிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்ட ராம்கோபால் வர்மா | பிளாஷ்பேக்: “பராசக்தி”க்கு முன் வெளிவர இருந்த சிவாஜியின் “பூங்கோதை” | அப்பா படத்தையடுத்து மகன் படத்தின் அப்டேட் | ‛ஜனநாயகன்' இசை வெளியீட்டு விழா உறுதி : எங்கே தெரியுமா? | மீண்டும் ‛டக்கர்' பட இயக்குனருடன் கைகோர்த்த சித்தார்த்! | ராஜமவுலி, மகேஷ் பாபு படத்தில் இணைந்து நடித்துள்ள கணவர், மனைவி! | ‛ரெட்ட தல' படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு! | ரஜினி, அஜித் உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் சம்பளத்துக்கு கட்டுப்பாடு? தயாரிப்பாளர் சங்கம் அதிரடி | சைபர் கிரைம் போலீஸில் அனுபமா பரமேஸ்வரன் புகார் | சம்பளத்தை உயர்த்திய நடிகர் மீது தயாரிப்பாளர்கள் அதிருப்தி |

சிக்கந்தர் படத்திற்கு பிறகு சிவகார்த்திகேயன் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி வெளியான படம் மதராஸி. ஆக்ஷன் கதைக்களத்தில் உருவான இந்த படம் கலவை விமர்சனங்களை சந்தித்தது. இதுவரை 80 கோடிக்கு மேல் வசூலித்திருப்பதாக பாக்ஸ் ஆபீஸ் தகவல் தெரிவிக்கிறது. இந்த நிலையில் மீண்டும் ஒரு ஆக்ஷன் கதையை இயக்கத் திட்டமிட்டுள்ள ஏ.ஆர்.முருகதாஸ் அந்த கதையை சமீபத்தில் சிவகார்த்திகேயன் இடத்தில் சொல்லி கால்ஷீட் கேட்டுள்ளார். ஆனால் அவரோ, பராசக்தி படத்திற்கு பிறகு தான் மூன்று இயக்குனர்களுக்கு கால்சீட் கொடுத்ததை சொல்லி அந்த படங்களுக்கு பிறகு தான் நடிக்க முடியும் என்று கூறிவிட்டாராம். இதனால் அதுவரைக்கும் சிவகார்த்திகேயனுக்காக காத்திருக்கலாமா? இல்லை வேறு ஹீரோக்களின் கால்சீட் கிடைத்தால் அவர்களை வைத்து இந்த புதிய படத்தை இயக்கலாமா? என்கிற ஆலோசனையில் இருந்து வருகிறார்.