தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் | ஜனநாயகனை விட பராசக்திக்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா? - திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | நீலாம்பரி போல கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பேன் ; நமீதா விருப்பம் | நாய்களை விலைக்கு வாங்காதீர்கள்.. தத்தெடுங்கள் ; ஷாலினி பாண்டே கோரிக்கை | படங்களின் லாப நட்ட கணக்கை ஏன் வெளியே சொல்ல வேண்டும் ? நிவின்பாலி கேள்வி | விஜய் இதை பார்த்தால் நிச்சயம் ரசிப்பார் ; மோகன்லால் கொடுத்த கிரீன் சிக்னல் | கர்மா பற்றி எனக்கு பாடம் எடுக்காதீர்கள் ; நடிகர் விநாயகன் காட்டம் | 2025ல் வெளியான நேரடி தமிழ்ப் படங்கள் பட்டியல்... |

புகழ்பெற்ற தெலுங்கு நாடகம் 'என்ஜிஓ'. ஆந்திரா முழுவதும் பரவலாக நடத்தப்பட்டு வந்த நாடகம். நடுத்தர வர்க்கத்தின் பிரச்னைகளை பேசியதால் நாடகத்திற்கு பெரிய வரவேற்பு இருந்து. குமாஸ்தாவாக பணியாற்றும் ஒருவர் தனது பெரிய குடும்பத்தை காப்பாற்ற போராடுவதுதான் நாடகத்தின் கதை. ஆச்சார்யா ஆத்ரேயா என்பவர் இந்த நாடகத்தை எழுதினார்.
இந்த நாடகம், 'குமாஸ்தா' என்ற பெயரில் தமிழ், தெலுங்கில் ஒரே நேரத்தில் சினிமா ஆனது. குமாஸ்தாவாக சித்தூர் நாகைய்யா நடித்தார், அவரது மனைவியாக ஜெயம்மா நடித்தார், தங்கையாக பண்டரிபாய் நடித்தார், வில்லனாக நரசிம்ம பாரதி நடித்தார்.
ஆர்.எம்.கிருஷ்ணசாமி இயக்கிய இந்த படத்திற்கு சி.என்.பாண்டுரங்கன், ஜி.ராமநாதன், நாகய்யா ஆகிய மூவரும் இசை அமைத்தார்கள். இயக்குனரே ஒளிப்பதிவாளராகவும் இருந்தார். தமிழில் தோல்வி அடைந்த இந்த படம் தெலுங்கில் ஓரளவிற்கான வரவேற்பை பெற்றது. நாடகம் போன்று படம் இல்லை என்ற விமர்சனமும் வந்தது.