Advertisement

சிறப்புச்செய்திகள்

சிரஞ்சீவியிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்ட ராம்கோபால் வர்மா | பிளாஷ்பேக்: “பராசக்தி”க்கு முன் வெளிவர இருந்த சிவாஜியின் “பூங்கோதை” | அப்பா படத்தையடுத்து மகன் படத்தின் அப்டேட் | ‛ஜனநாயகன்' இசை வெளியீட்டு விழா உறுதி : எங்கே தெரியுமா? | மீண்டும் ‛டக்கர்' பட இயக்குனருடன் கைகோர்த்த சித்தார்த்! | ராஜமவுலி, மகேஷ் பாபு படத்தில் இணைந்து நடித்துள்ள கணவர், மனைவி! | ‛ரெட்ட தல' படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு! | ரஜினி, அஜித் உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் சம்பளத்துக்கு கட்டுப்பாடு? தயாரிப்பாளர் சங்கம் அதிரடி | சைபர் கிரைம் போலீஸில் அனுபமா பரமேஸ்வரன் புகார் | சம்பளத்தை உயர்த்திய நடிகர் மீது தயாரிப்பாளர்கள் அதிருப்தி |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

முதலில் மறக்கப்பட்டதா ‛ஜனனி' பாடல் : பாடி முடித்து வைத்த இளையராஜா

15 செப், 2025 - 12:36 IST
எழுத்தின் அளவு:
Janani-song-was-first-forgotten-Ilayaraja-finished-singing-it
Advertisement

இளையராஜாவின் இசைக் கச்சேரிகளில் பல ஆண்டுகளாக ‛ஜனனி ஜனனி ஜகம் நீ...' பாடல்தான் முதலில் பாடப்படும். சென்டிமென்ட் ஆக அந்த பாடலை இளையராஜா பாடுவது வழக்கம். இளையராஜா பங்கேற்ற கச்சேரிகளில் இதுதான் நடைமுறை. சிலசமயம், இளையராஜா குடும்ப உறுப்பினர்கள், அவருடன் இணைந்து பாடுவார்கள்.

1982ல் கே.சங்கர் இயக்கத்தில் ‛தாய் மூகாம்பிகை' படத்தில் இடம் பெற்ற பாடல் இது. முதலில் இந்த பாடலை ஜேசுதாஸ் பாடினால் நன்றாக இருக்கும் என்று இயக்குனரிடம் எம்ஜிஆர் சொன்னாராம். ஆனால், சூழ்நிலைகள் காரணமாக இளையராஜாவே பாடினார். கர்நாடக மாநிலம், கொல்லுார் தாய் மூகாம்பிகையை போற்றும் இந்த பாடலை ஆதிசங்கரரர் பாடுவதாக காட்சி அமைந்து இருக்கும். அதனால், பாடலின் முதலில் வரும் சமஸ்கிருத வரிகள் ஆதிசங்கரரின் சவுந்தர்ய லஹரியில் இருந்து எடுக்கப்பட்டு இருக்கும். மீதி வரிகளை பக்திப்பூர்வமாக எழுதியவர் கவிஞர் வாலி.



இளையராஜா ஜனனி பாடலை ஆர்மோனியம் வைத்து பாட ஆரம்பித்தால் கைதட்டல் விசில் பறக்கும். ஆனால், சென்னையில் நடந்த தமிழக அரசின் இளையராஜா பாராட்டு விழாவின் துவக்கத்தில் இந்த பாடல் பாடப்படவில்லை. அதற்கு பதிலாக ‛அமுதே தமிழே' என்ற பாடலை, தனது இருக்கையில் இருந்தபடியே,பாடினார் இளையராஜா. இந்த பாடல் அவர் இசையமைத்த ‛கோயில் புறா' படத்தில் இடம் பெற்றது. புலமைப்பித்தன் எழுத பி.சுசீலா, உமாரமணன் பாடியிருந்தனர். இந்த படம் 1981ல் ரிலீஸ் ஆனது.

இந்த மாற்றம் பலருக்கு ஆச்சரியத்ததை கொடுத்தது. ஜனனி பாடலை எப்படி மறந்தார் இளையராஜா என்று பலரும் கேள்வி எழுப்பினர். ‛இன்று பாராட்டு விழாவில் பாடும் பாடல்கள் பட்டியலை தந்தவர் முதல்வர் ஸ்டாலின்' என்று பின்னர் விளக்கம் கொடுத்தார் கமல்ஹாசன். பொதுவாக திமுக., மற்றும் முதல்வர் ஸ்டாலின் அரசு பகுத்தறிவு கொள்கை கொண்டவர்கள் என கூறுவதால் பக்தி பாடலை தவிர்த்து இருக்கலாம். ஆனாலும், பார்வையாளர்களுக்கு இது குறையாக இருந்தது.



ரஜினி, கமல், இளையராஜா பேசி முடிந்ததும், பார்வையாளர்கள் இளையராஜாவை பாட சொல்லி வேண்டுகோள் வைத்தனர். நான் தான் பாடிவிட்டேனே என்று முதலில் தயங்கிய இளையராஜா பின்னர் சற்றும் யோசிக்காமல் முதல்வர் முன்னிலையில் ‛ஜனனி ஜகம் நீ...' பாடலை உணர்ப்பூர்வமாக பாடி விழாவை நிறைவு செய்தார். பலமுறை தனது பேட்டிகளில் தனது இசை இறைவனிடம் இருந்து வருகிறது. அவன்தான் பாட வைக்கிறார் என்று கூறியிருக்கிறார். விழா ஏற்பாட்டாளர்கள் ஜனனி பாடலை மறந்திருந்தாலும், விழா முடிவில் அந்த பாடலை தவிர்க்க முடியவில்லை என கூறியபடி ரசிகர்கள் விடை பெற்றனர்.

கடந்த வாரம் இந்த பாடல் பாடப்பெற்ற கொல்லுார் மூகாம்பிகை கோயிலுக்கு சென்ற இளையராஜா சில கோடி மதிப்புள்ள வைர கீரிடம், தங்கவாளை சமர்பித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
தயாரிப்பு நிறுவனம் துவங்கிய 'மின்னல் முரளி' இயக்குனர்தயாரிப்பு நிறுவனம் துவங்கிய ... ரஜினியின் அதிசய பிறவி பாணியில் தர்ஷன் நடிக்கும் படம் ரஜினியின் அதிசய பிறவி பாணியில் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

15 செப், 2025 - 11:09 Report Abuse
vijay,covai super
Rate this:
நிக்கோல்தாம்சன் - chikkanayakanahalli , tumkur dt and Bangalore,,இந்தியா
15 செப், 2025 - 09:09 Report Abuse
நிக்கோல்தாம்சன் திரு ஸ்டாலின் புத்தி பேதலித்து விட்டது போல தோன்றுகிறது . இளையராஜாவின் அந்த குரலை , அவர் லயித்து பாடுவதை கேட்பதை விடுத்து மதவாதியாக ஸ்டாலின் நடந்துகொண்டது வேதனையளிக்கிறது , கலைக்கு எல்லை உண்டோ ஸ்டாலின்?
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    Tamil New Film Party
    • பார்ட்டி
    • நடிகர் : ஜெய் ,சரத்குமார்,சந்திரன் (கயல்)
    • நடிகை : ரெஜினா ,நிவேதா பெத்ராஜ்
    • இயக்குனர் :வெங்கட் பிரபு
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2025 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in