தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் | ஜனநாயகனை விட பராசக்திக்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா? - திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | நீலாம்பரி போல கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பேன் ; நமீதா விருப்பம் | நாய்களை விலைக்கு வாங்காதீர்கள்.. தத்தெடுங்கள் ; ஷாலினி பாண்டே கோரிக்கை | படங்களின் லாப நட்ட கணக்கை ஏன் வெளியே சொல்ல வேண்டும் ? நிவின்பாலி கேள்வி | விஜய் இதை பார்த்தால் நிச்சயம் ரசிப்பார் ; மோகன்லால் கொடுத்த கிரீன் சிக்னல் | கர்மா பற்றி எனக்கு பாடம் எடுக்காதீர்கள் ; நடிகர் விநாயகன் காட்டம் | 2025ல் வெளியான நேரடி தமிழ்ப் படங்கள் பட்டியல்... |

கவுதம் கார்த்திக் நடிப்பில் 'ரங்கூன்' என்ற படத்தை இயக்கிய ராஜ்குமார் பெரியசாமி, அதையடுத்து சிவகார்த்திகேயன் நடிப்பில் 'அமரன்' படத்தை இயக்கினார். இந்த படம் 300 கோடிக்கு மேல் வசூலித்தது. இந்த நிலையில் அடுத்தபடியாக அவர் ஹிந்தி படம் இயக்கப் போவதாக செய்திகள் வெளியாகி வந்த நிலையில், தற்போது தனுஷின் 55வது படத்தை அடுத்து தான் இயக்குவதாக அறிவித்துள்ளார் ராஜ்குமார் பெரியசாமி. தனுசுடன் தான் எடுத்துக் கொண்ட ஒரு புகைப்படத்தையும் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
தனுஷ் உடன் அவர் எடுத்துக் கொண்ட புகைப்படத்தின் பின்னணியில் தனுஷின் 55வது படத்திற்கான பூஜை நடத்தப்பட்ட காட்சிகள் இடம் பெற்றுள்ளது. மேலும், மகாசிவராத்திரியில் சிவபெருமானின் அருளைப் பெற்று அனைவரும் அமைதியுடனும் பாசிட்டிவ் எனர்ஜுயுடனும் இருக்க வேண்டும் என்று வாழ்த்துகிறேன். நற்றுணையாவது நமச்சிவாயவே என்றும் அவர் பதிவிட்டுள்ளார். அடுத்தபடியாக இந்த படத்தின் படப்பிடிப்பு எப்போது தொடங்கும் மற்றும் நடிகர் நடிகைகள் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்புகள் வெளியாகும் என்று தெரிகிறது.