படப்பிடிப்புக்கு முன்பே பின்னணி இசை : 'ஸ்பிரிட்'டில் புதிய முயற்சி | திருமணத்திற்கு பிறகு கவர்ச்சியாக நடிப்பதில் தவறில்லை : ரகுல் ப்ரீத் சிங் | சுமாரான வரவேற்பில் அனுஷ்காவின் 'காட்டி' | புகழ் படம் வந்ததே தெரியாது, பாலா படம் வந்தது தெரிகிறது…!! | மீசைய முறுக்கு 2 நடிக்க மறுத்தது ஏன்? : தேவா விளக்கம் | குறைந்த காட்சிகளுடன் 4வது வாரத்தில் 'கூலி' | அக்., 2ல் ஓடிடியில் வெளியாகும் ‛தி கேம்' வெப் தொடர் | நிவின்பாலிக்கு தமிழில் ரசிகர்கள் கிடைப்பார்களா? | சம்பளம் வாங்காமல் நடிப்பார் ஜி.வி.பிரகாஷ் | விஷால் திருமணத்துக்கு செல்வாரா மிஷ்கின் |
நாய் சேகர் ரிட்டன்ஸ் படத்தில் மீண்டும் ஹீரோவாக ரீ என்ட்ரி கொடுத்த வடிவேலுவுக்கு அந்த படம் எதிர்பார்த்தபடி வெற்றி பெறவில்லை. அதன்பிறகு மாமன்னன் படத்தில் நடித்த குணச்சித்ர வேடம் அவரை பேச வைத்தது. தற்போது பகத் பாசிலுடன் இணைந்து மாரீசன் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது. இதுதவிர சுந்தர் சி இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கிறார்.
இந்த நிலையில் அடுத்தபடியாக சர்தார்-2 வை அடுத்து கார்த்தி நடிக்கும் அவரது 29வது படத்தில் நடிக்க போகிறார் வடிவேலு. விக்ரம் பிரபு நடித்த டாணாக்காரன் படத்தை இயக்கிய தமிழ் இயக்கும் இந்த படத்தில் மாமன்னன் படத்தைப் போன்று காமெடி அல்லாத ஒரு குணச்சித்ர வேடத்தில் மீண்டும் நடிக்க போகிறாராம் வடிவேலு. அதோடு முதன்முறையாக கார்த்தி உடன் இணைந்து நடிக்க போகிறார் வடிவேலு.