துரந்தர் 2 : படம் பார்க்காமல் பாராட்டிய ஆமிர்கான் | சான்வே மேக்னாவின் புதிய படம் | பிளாஷ்பேக்: இளையராஜாவின் ஆல்பம் இசையை பின்னணி இசையாக பயன்படுத்திய பாலுமகேந்திரா | பிளாஷ்பேக் : கடைசி வரை கஷ்டத்தில் வாழ்ந்த புஷ்பவல்லி | நிறைய சுமைகளை சுமக்காதீர்கள் : சமுத்திரகனி அட்வைஸ் | ‛நூறு சாமி' படக் கதை குறித்து பகிர்ந்த சசி | முத்து என்கிற காட்டானுக்கு பின்னால் நடந்ததையும் வெப் தொடராக எடுக்கலாம் : விஜய் சேதுபதி | ஓடிடியில் வரவேற்பைப் பெற்ற 'மேட் இன் கொரியா' | துரந்தர் : இரண்டு பாகங்களிலும் 1000 கோடி வசூலித்த முதல் இந்தியத் திரைப்படம் | பாலிவுட்டில் கவனம் செலுத்தும் ராஷி கண்ணா |

நடிகை பூஜா ஹெக்டே தெலுங்கு, ஹிந்தி, தமிழ் ஆகிய மொழி படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். தற்போது தமிழில் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா உடன் ‛ரெட்ரோ' படத்தில் நடித்து முடித்துள்ளார். இதுதவிர வினோத் இயக்கத்தில் விஜய்யின் 69வது படத்தில் நாயகியாக நடித்து வருகிறார். சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில் தென்னிந்திய சினிமா பல விஷயங்களை பகிர்ந்தார்.
ரெட்ரோ பட வாய்ப்பு எப்படி கிடைத்தது குறித்து அவர் கூறியதாவது, "ரெட்ரோ படத்தில் நடித்துள்ள கதாபாத்திரம் இதுவரை நான் நடித்ததில் இருந்து முற்றிலும் வேறுபட்டு இருக்கும். ராதே ஷ்யாம் படத்தில் நான் நடித்த இரண்டு எமொசனல் காட்சிகள் தான் இப்படத்தில் எனக்கான வாய்ப்பை பெற்று தந்தது. இந்த தகவலை கார்த்திக் சுப்பராஜ் தான் என்னிடம் தெரிவித்தார்" என்றார்.