என் கருத்துக்களை திட்டமிட்டே சர்ச்சை ஆக்குகிறார்கள் : ராஷ்மிகா ஆதங்கம் | பிளாஷ்பேக்: சிந்தைக்கும், செவிக்கும் விருந்தளித்த ஸ்ரீதரின் “சிவந்த மண்” | தனுஷை தொடர்ந்து நானியை இயக்கும் சேகர் கம்முலா | கூலி படம் இன்னொரு தளபதி : லோகேஷை கட்டிப்பிடித்து பாராட்டிய ரஜினி | சிவராஜ்குமாரை இயக்கும் தமிழ் இயக்குனர் | சாம் ஆண்டன் இயக்கத்தில் பிரபுதேவா, வடிவேலு | பவித்ராவுக்கு என்னாச்சு?: அவரே வெளியிட்ட விளக்கம் | மீண்டும் இணைந்த பிளாக் பட கூட்டணி! | இளையராஜா பாடலை பயன்படுத்த, வனிதாவுக்கு தடைவிதிக்க கோர்ட் மறுப்பு | விடைபெற்றார் நடிகை சரோஜாதேவி : சொந்த ஊரில் அரசு மரியாதையுடன் உடல் நல்லடக்கம் |
நாய் சேகர் ரிட்டன்ஸ் படத்தில் மீண்டும் ஹீரோவாக ரீ என்ட்ரி கொடுத்த வடிவேலுவுக்கு அந்த படம் எதிர்பார்த்தபடி வெற்றி பெறவில்லை. அதன்பிறகு மாமன்னன் படத்தில் நடித்த குணச்சித்ர வேடம் அவரை பேச வைத்தது. தற்போது பகத் பாசிலுடன் இணைந்து மாரீசன் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது. இதுதவிர சுந்தர் சி இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கிறார்.
இந்த நிலையில் அடுத்தபடியாக சர்தார்-2 வை அடுத்து கார்த்தி நடிக்கும் அவரது 29வது படத்தில் நடிக்க போகிறார் வடிவேலு. விக்ரம் பிரபு நடித்த டாணாக்காரன் படத்தை இயக்கிய தமிழ் இயக்கும் இந்த படத்தில் மாமன்னன் படத்தைப் போன்று காமெடி அல்லாத ஒரு குணச்சித்ர வேடத்தில் மீண்டும் நடிக்க போகிறாராம் வடிவேலு. அதோடு முதன்முறையாக கார்த்தி உடன் இணைந்து நடிக்க போகிறார் வடிவேலு.