நீண்ட இடைவெளிக்குப் பின் டிவி பக்கம் வந்த ரோஜா | சென்னையில் இன்று புதிதாகத் திறக்கப்பட்ட 2 தியேட்டர்கள் | தமிழ் சினிமாவின் 3 மாதங்கள்…. வசூல் 300 கோடி மட்டுமே…. | இயக்குனர் மணிகண்டன் ஏன் பேசவில்லை | கர படத்தை தமிழகத்தில் வெளியிடும் ரெட் ஜெயன்ட் நிறுவனம் | பாய்ஸ் படத்தை ரீ ரிலீஸ் செய்ய தயாரிப்பாளர் திட்டம் | ரசிங்க, விமர்சனம் செய்யாதீங்க : திஷா பதானி | ‛சிறை' அனிஷ்மாவின் மூன்றாவது தமிழ் படம் | எனக்கு கிடைத்த இரண்டு சகோதரர்கள் : பவன் கல்யாண் மனைவி நெகிழ்ச்சி | ரசிகர்களை உற்சாகப்படுத்த தியேட்டர்களில் வெளியாகும் திரிஷ்யம் 2 |

நாய் சேகர் ரிட்டன்ஸ் படத்தில் மீண்டும் ஹீரோவாக ரீ என்ட்ரி கொடுத்த வடிவேலுவுக்கு அந்த படம் எதிர்பார்த்தபடி வெற்றி பெறவில்லை. அதன்பிறகு மாமன்னன் படத்தில் நடித்த குணச்சித்ர வேடம் அவரை பேச வைத்தது. தற்போது பகத் பாசிலுடன் இணைந்து மாரீசன் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது. இதுதவிர சுந்தர் சி இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கிறார்.
இந்த நிலையில் அடுத்தபடியாக சர்தார்-2 வை அடுத்து கார்த்தி நடிக்கும் அவரது 29வது படத்தில் நடிக்க போகிறார் வடிவேலு. விக்ரம் பிரபு நடித்த டாணாக்காரன் படத்தை இயக்கிய தமிழ் இயக்கும் இந்த படத்தில் மாமன்னன் படத்தைப் போன்று காமெடி அல்லாத ஒரு குணச்சித்ர வேடத்தில் மீண்டும் நடிக்க போகிறாராம் வடிவேலு. அதோடு முதன்முறையாக கார்த்தி உடன் இணைந்து நடிக்க போகிறார் வடிவேலு.