‛வட சென்னை' பின்னணியில் வெற்றிமாறன் - சிம்பு படம்: அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் தாணு | அக்டோபர் முதல் வாரத்தில் நெட்பிளிக்ஸில் வெளியாகும் ‛வார்-2' | சிவகார்த்திகேயனின் ‛மதராஸி' படத்தின் டிக்கெட் முன்பதிவு எத்தனை கோடி? | பைனான்ஸ் பிரச்னை காரணமாக ஜேசன் சஞ்சய் படத்தின் படப்பிடிப்பு நிறுத்தமா? | தனுஷின் ‛இட்லி கடை' படத்தை வெளியிடும் இன்பன் உதயநிதி! | உங்களை விட்டால் யார் இருக்கா ? அனுஷ்காவிடம் ராணா கலாட்டா | பிஜூமேனன் நடிப்பதாக இருந்த ‛கீர்த்தி சக்ரா' ; மோகன்லாலுக்கு கை மாறியது ஏன் ? இயக்குனர் மேஜர் ரவி புதிய தகவல் | நிவின்பாலியின் படங்களை பாராட்டிய பவன் கல்யாண் | ஏஆர் ரஹ்மான் இசையமைப்பில் வசனம் இல்லாமல் வெளியாகும் ‛உப் யே சியாபா' | யார் இடத்தையும் யாரும் பிடிக்கவில்லை: சிவகார்த்திகேயன் |
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள 'மதராஸி' திரைப்படம் நாளை ரிலீசாகிறது. படம் பற்றி சிவகார்த்திகேயன் கூறுகையில், ''நான் இவ்வளவு ஆக்சன் காட்சிகளுடன் கூடிய படங்களில் நடித்ததில்லை. இது முற்றிலும் மாஸ் கமர்ஷியல் ஆக்சன் படமாக இருக்கும். ஏஆர் முருகதாஸ் ரொம்ப கூல்லான இயக்குனர்.
இந்த படத்தில் அரசியல் மெசேஜ் இல்லை. அமரன் எதிர்பார்ப்பில் மக்கள் வருவார்கள் என்பது உண்மைதான். மதராஸி பார்த்தபிறகு அவர்களின் ரியாக்சன் பார்க்க வெயிட் பண்ணுறேன். நடிகர் ரஜினிகாந்தின் பயோபிக்-ல் நடிக்க ஆசை. காமெடி படங்களில் மட்டுமல்லாமல் எல்லா வகையான படங்களிலும் நடிக்க ஆசை. யார் இடத்தையும் யாரும் பிடிக்கவில்லை; நான் என் இடத்தில் இருக்கிறேன். அடுத்து நான் நடிக்கும் பராசக்தி படம் 60களில் நடக்கும் கதையாக உருவாகிறது'' என்றார்.