எக்ஸாம் வெப்சீரிஸ் : சற்குணத்திற்கு துஷாரா தரும் ‛ஆபர்' | சூர்யாவின் கருப்பு பட சிறப்பு காட்சிக்கு தமிழகஅரசு அனுமதி | 'பெத்தி' படம் தெலுங்கு மார்க்கெட்டை பிடித்து தரும்: ஜான்வி கபூர் நம்பிக்கை | மே 14ல் நெட்பிளிக்சில் வெளியாகும் 'துரந்தர்-2' | ஏ.ஆர்.முருகதாஸ் சொன்ன அட்வைஸ் : இன்றைக்கும் கடைபிடிக்கிறாராம் ஜெய் | விஜய் முதல்வராக பொறுப்பேற்றுள்ளாரே, எப்படி பார்க்கிறீர்கள்? மீடியாக்கள் கேள்விக்கு ரஜினியின் ரியாக்சன்! | ரஜினி, கமலுக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய் | 75 நாளில் 90 கோடி வசூலித்த ராதிகாவின் தாய் கிழவி! | அனில் ரவிபுடி படத்திற்கு இசையமைக்கும் ஜி.வி.பிரகாஷ் | பிளாஷ்பேக் : காணாமல் போன நல்லவள் |

தமிழில் 96, மெய்யழகன் ஆகிய மென்மையான படங்களை இயக்கியவர் பிரேம் குமார். இவரின் அடுத்த படத்தில் விக்ரம் நாயகனாக நடிக்கவுள்ளார் என அறிவிப்பு வெளியாகி பின்னர் அந்த படம் தள்ளிப்போனது. அதன்பிறகு மலையாள நடிகர் பஹத் பாசிலை வைத்து புதிய படம் ஒன்றை இயக்கவுள்ளதாக அவரே ஒரு பேட்டியில் குறிப்பிட்டிருந்தார்.
இந்த நிலையில் சமீபத்தில் தெலுங்கு நடிகர் நானியை சந்தித்து பிரேம் குமார் ஒரு புதிய கதையை கூறியுள்ளார். இந்த கதை நானிக்கு பிடித்துள்ளதால் அவர் நடித்து வரும் படங்களை முடித்தவுடன் இந்த கதையில் நடிக்கிறேன் என உறுதியளித்துள்ளதாக சினிமா வட்டாரத்தில் தகவல்கள் தெரிவிக்கின்றன.




