Advertisement

சிறப்புச்செய்திகள்

பராசக்தி யூனிட்டுக்கு பிரியாணி விருந்து தந்த சிவகார்த்திகேயன் | ரிதம், டைமிங் முக்கியம்... தேவரா பாடலுக்கு நயன்தாரா - விக்னேஷ் சிவன் மகன்களின் கியூட் ‛ஹான்' | மகாபாரதம் குறித்து அடுத்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் : இயக்குனர் லிங்குசாமி | அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் அக்ஷய் குமார் | ரீ ரிலீஸ் ஆகும் தனுஷின் ஹிந்தி படம் | நானியின் ‛ஹிட் 3' படத்தின் டீசர் அப்டேட் வெளியானது | ஹெலிகாப்டர் புரமோஷன் கேட்டாரா டொவினோ தாமஸ்? தயாரிப்பாளர் விளக்கம் | பில்லா ரங்கா பாஷா ரிலீஸ் அப்டேட் வெளியிட்ட கிச்சா சுதீப் : அதிருப்தி குறையாத ரசிகர்கள் | நயன்தாராவை பார்த்து நடிக்க வந்த காவ்யா அறிவுமணி | டிஜிட்டல் தொழில்நுட்பக் கலைஞர்கள் புதிய சங்கம் துவக்கம் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

முதலில் ஹிந்திக்காக எழுதப்பட்ட கதை தான் 96 : இயக்குனர் பிரேம்குமார்

18 பிப், 2025 - 11:35 IST
எழுத்தின் அளவு:
The-first-story-written-for-Hindi-is-96-director-Premkumar

2018ல் விஜய்சேதுபதி, திரிஷா நடிப்பில் வெளியான 96 திரைப்படம் ரசிகர்களிடம் ஏகோபித்த வரவேற்பை பெற்றது. நட்பு, காதல் என இரு தளங்களில் அழகாக பயணித்த இந்த படத்தை ஒரு பீல் குட் படமாக இயக்கி இருந்தார் பிரேம்குமார். அதனை தொடர்ந்து சில வருட இடைவெளிக்கு பிறகு சமீபத்தில் கார்த்தி, அரவிந்த்சாமி நடித்த மெய்யழகன் என்கிற படத்தையும் இயக்கினார்.

தற்போது ஹிந்தியில் ஒரு புதிய படத்தை இயக்குவதற்காக ஸ்கிரிப்ட் ஒன்றை தயார் செய்து வருகிறார் பிரேம்குமார். அது மட்டுமல்ல 96 படத்தையே முதலில் தான் ஹிந்தியில் படமாக இயக்க விரும்பி தான் கதை எழுதியதாகவும் சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட போது கூறியுள்ளார் பிரேம்குமார்.

சமீபத்தில் இந்திய அளவில் நடைபெற்ற எழுத்தாளர்கள் கருத்தரங்கத்தில் கலந்து கொண்ட பிரேம்குமார் பேசியபோது, “என் தந்தை வடநாட்டில் வசித்தவர். நான் வளர்ந்தது எல்லாமே வடநாட்டில் தான். அதனால் எனக்கு ஹிந்தி ரொம்பவே சரளமாக தெரியும். நான் பார்த்து வளர்ந்தது பெரும்பாலும் ஹிந்தி படங்களை தான். அதனால் 96 படத்தின் கதையை எழுதியபோதே அதை ஹிந்தியில் தான் இயக்க வேண்டும் என்று எழுதினேன். அதில் அபிஷேக் பச்சன் கதாநாயகனாக நடிக்க வேண்டும் என்றும் முடிவு செய்து அதற்காக முயற்சி செய்தபோது காரியங்கள் கைகூடி வரவில்லை. அதன் பிறகு தான் அதை தமிழில் இயக்கினேன். மெய்யழகன் படத்திற்கு பிறகு தற்போது ஹிந்தியில் இயக்கும் விதமாக ஒரு படத்திற்கான கதையை எழுதி முடித்து இருக்கிறேன்” என்று கூறியுள்ளார் பிரேம்குமார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
பாட்டியின் ஆசையை நிறைவேற்ற தேசிய விருதுக்கு ஆசைப்படும் சாய் பல்லவிபாட்டியின் ஆசையை நிறைவேற்ற தேசிய ... 36 வருடங்களை நிறைவு செய்த 'வருஷம் 16' : வருஷங்கள் ஆனாலும் மறக்க முடியாத காதல் காவியம்! 36 வருடங்களை நிறைவு செய்த 'வருஷம் 16' : ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    Tamil New Film Party
    • பார்ட்டி
    • நடிகர் : ஜெய் ,சரத்குமார்,சந்திரன் (கயல்)
    • நடிகை : ரெஜினா ,நிவேதா பெத்ராஜ்
    • இயக்குனர் :வெங்கட் பிரபு
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2025 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in