காதலருடன் ஹூமா குரேஷிக்கு நிச்சயதார்த்தம் நடந்ததா? | ரோபோ சங்கர் நினைவாக குபேரர் கோவிலுக்கு ரோபோ யானையை பரிசளித்த நடிகர் டிங்கு! | தீபாவளிக்கு 'கருப்பு' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியாகிறது! | ஹாட்ரிக் அடிக்கிறாரா பிரதீப் ரங்கநாதன் | ராஜமவுலி தயாரிப்பில் பஹத் பாசில் புதிய பட படப்பிடிப்பு துவங்கியது! | இசைத்துறையில் சாதிக்க என்ன செய்ய வேண்டும்? அழகாக சொல்கிறார் அனுராதா ஸ்ரீராம் | 'காந்தாரா சாப்டர் 1' ஹிட்: ஆன்மிக பயணம் செல்லும் ரிஷப் ஷெட்டி | ரஜினி பிறந்தநாளில் பிரமாண்டமாக ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை! | இயக்குனர் கென் கருணாஸ் உடன் இணைந்த ஜி.வி. பிரகாஷ்! | 'பள்ளிச்சட்டம்பி' படப்பிடிப்பை நிறைவு செய்த கயாடு லோஹர் |
நடிகர் சூர்யா தற்போது வெங்கி அட்லூரி இயக்கத்தில் அவரது 46வது படத்தில் நடித்து வருகிறார். இதற்கு அடுத்த படத்தில் சூர்யா நடிப்பதற்காக பல இயக்குனர்களுடன் கதை கேட்டு வந்தார்.
சமீபத்தில் சூர்யா 47வது படத்தை இயக்குவது மலையாளத்தில் வெளியான 'ஆவேசம்' பட இயக்குனர் ஜித்து மாதவன் என்பது உறுதியாகியுள்ளது. இந்த படத்தை 2டி என்டர்டெயின்மென்ட் மற்றும் ஸ்டுடியோ கிரீன் என இரு நிறுவனமும் இணைந்து தயாரிக்கின்றனர்.
இந்த நிலையில் இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்க நஸ்ரியாவை ஒப்பந்தம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே புறநானூறு படத்தில் சூர்யாவுடன் இணைந்து நஸ்ரியா நடிப்பதாக அறிவித்தனர். பின்னர் அந்த படம் கைவிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.