பாலிவுட்டில் கவனம் செலுத்தும் ராஷி கண்ணா | பவிஷின் ‛லவ் ஓ லவ்' முதல்பார்வை வெளியீடு | ஒரே வாரத்தில் ஆயிரம் கோடி வசூல் செய்த துரந்தர் 2 | நேரடி ஓடிடி ரிலீஸ் : விஜய் சேதுபதி நடிக்கும் காட்டான் முதல் வரிசை கட்டும் புதுவரவுகள் | ஐஸ்வர்யா ராய் பார்த்து நடிக்க ஆசைப்பட்டேன்: அபிநயா | கோவாவில் செட்டில் ஆகிறாரா ரவிமோகன் | 'எல்ஐகே' படத்தால் மாறிய 'காளிதாஸ் 2, லீடர்' வெளியீடுகள் | தாய்லாந்து தீவில் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா ஹனிமூன் | பிரசாந்த் நடிக்க வேண்டிய 'பூவே உனக்காக' : தேடிப் போன விஜய் அப்பா…! | 'பெத்தி' படப்பிடிப்பில் ராம்சரணுக்கு கண்ணில் காயம் பட்டதா ? படக்குழுவினர் விளக்கம் |

நடிகர் சூர்யா தற்போது வெங்கி அட்லூரி இயக்கத்தில் அவரது 46வது படத்தில் நடித்து வருகிறார். இதற்கு அடுத்த படத்தில் சூர்யா நடிப்பதற்காக பல இயக்குனர்களுடன் கதை கேட்டு வந்தார்.
சமீபத்தில் சூர்யா 47வது படத்தை இயக்குவது மலையாளத்தில் வெளியான 'ஆவேசம்' பட இயக்குனர் ஜித்து மாதவன் என்பது உறுதியாகியுள்ளது. இந்த படத்தை 2டி என்டர்டெயின்மென்ட் மற்றும் ஸ்டுடியோ கிரீன் என இரு நிறுவனமும் இணைந்து தயாரிக்கின்றனர்.
இந்த நிலையில் இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்க நஸ்ரியாவை ஒப்பந்தம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே புறநானூறு படத்தில் சூர்யாவுடன் இணைந்து நஸ்ரியா நடிப்பதாக அறிவித்தனர். பின்னர் அந்த படம் கைவிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.