வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி | குருநாதருக்கு நன்றி செலுத்தும் மிஷ்கின் | அடுத்த ஆண்டாவது ஒலிக்குமா என் இனிய தமிழ் மக்களே | கூலி படத்துக்கு விமர்சனம் : மவுனம் கலைத்த லோகேஷ் கனகராஜ் | தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் | ஜனநாயகனை விட பராசக்திக்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா? - திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | நீலாம்பரி போல கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பேன் ; நமீதா விருப்பம் |

மலையாள திரை உலகில் சமீப காலமாக இரண்டு கதாநாயகிகள் இளைஞர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வருகிறார்கள். வெற்றி படங்களில் நடித்து அடுத்த கட்டத்திற்கு முன்னேறி வருகிறார்கள். அவர்களில் ஒருவர் மமிதா பைஜூ. இன்னொருவர் அனஸ்வரா ராஜன். இவர்கள் இருவருமே ஒரே காலகட்டத்தில் சினிமாவில் நுழைந்தவர்கள் தான். இதில் பிரேமலு படத்திற்கு முன்பே அனஸ்வரா ராஜன் ரசிகர்கள் மத்தியில் ரொம்பவே பிரபலமானவர். பிரேமலு வெற்றிக்குப் பிறகுதான் மமிதா பைஜூ அடுத்த கட்டத்திற்கு நகர்ந்து இருக்கிறார். தற்போது விஜய் படத்தில் நடித்து வரும் அளவிற்கு முன்னேறி இருக்கிறார்.
அனஸ்வராவும் மமிதாவும் 'சூப்பர் சரண்யா' என்கிற படத்தில் ஒன்றாக இணைந்து நடித்திருந்தார்கள். ஆனால் இப்போது அவர்கள் இருவருமே வளர்ந்து வருவதால் இருவருக்குள்ளும் போட்டி ஏற்பட்டுள்ளது என்றும் இருவரும் எதிரிகள் போல ஒருவருக்கொருவர் பேசிக்கொள்வது இல்லை என்றும் சோசியல் மீடியாவில் ஒரு செய்தி பரவி வருகிறது.
இந்த நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் அனஸ்வரர் ராஜன் கூறும்போது, “நானும் மமிதா பைஜூவும் இதயபூர்வமான நட்புடன் பழகி வருகிறோம். நாங்கள் போட்டியாளர்கள் அல்ல. இன்னும் சொல்லப்போனால் எங்கள் குரூப்பில் இருக்கும் மேத்யூ தாமஸ் நஸ்லேன், மமிதா உள்ளிட்ட அனைவருமே யாரும் யாரையும் போட்டியாக கருதுவதில்லை. எங்களுக்கு கிடைக்கும் வாய்ப்பை பயன்படுத்தி அதில் எப்படி சிறப்பாக எங்களை வெளிப்படுத்த முடியும் என்பதை தான் பார்க்கிறோம். எதனால் இப்படி ஒரு செய்தி பரவியது என்று தெரியவில்லை” என கூறியுள்ளார்.