விக்ரமிற்கு ஜோடியாகும் ருக்மணி வசந்த் | கூலி படத்தில் வலிமையான கதாபாத்திரத்தில் நடிக்கிறேன் : ஸ்ருதிஹாசன் | கீரவாணிவுடன் கம்போசிங் பணியில் ராஜமவுலி | வார் 2 படத்திற்காக மீண்டும் சிக்ஸ்பேக்கிற்கு மாறிய ஜூனியர் என்டிஆர் | கூலி படத்தில் ரஜினிக்காக லோகேஷ் கனகராஜ் செய்த மாற்றம் | தலைவன் தலைவி, மாரீசன் படங்களின் முதல் நாள் வசூல் எவ்வளவு? | மணிகண்டனை இயக்குனர் தியாகராஜன் குமார ராஜா | கருப்பு படத்தை தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய முயற்சி பண்றோம் : ஆர்.ஜே. பாலாஜி | பிரசாந்த் படத்தில் அறிமுகமாகும் பிரபலங்களின் வாரிசுகள் | திருமணம் செய்யாமலேயே கர்ப்பம் ஆன பாவனா |
தனுஷ் இயக்கம், நடிப்பில் தயாராகி வரும் படம் 'இட்லி கடை'. இப்படத்தை ஏப்ரல் 10ம் தேதி வெளியிடப் போவதாக ஏற்கெனவே அறிவித்துவிட்டார்கள். இப்படத்திற்காக வெளிநாட்டில் இன்னும் படப்பிடிப்பு நடத்த வேண்டி இருக்கிறதாம். அதற்காக நித்யா மேனனிடம் தேதிகளைக் கேட்டால் அவர் தன்னிடம் தேதிகள் இல்லை என்று சொல்லிவிட்டாராம்.
பாண்டிராஜ் இயக்கத்தில், விஜய் சேதுபதி நடிக்கும் படத்திற்காக மார்ச் மாதம் வரை தன்னுடைய தேதிகளை ஏற்கெனவே கொடுத்துவிட்டதால் 'இட்லி கடை' படத்திற்கு மேலும் தேதிகளைத் தர வாய்ப்பில்லை என்றாராம். நித்யாவிடம் வாங்கிய தேதிகளில் தனுஷ் அவரை வைத்து படப்பிடிப்பு நடத்தாமல் வேறு சிலரை வைத்து படப்பிடிப்பை நடத்தியுள்ளார். தன்னுடைய தேதிகளை சரியாகப் பயன்படுத்தாமல் வீணாக்கியதாக நித்யா மேனன் சொல்லிவிட்டாராம்.
வெளியீட்டுத் தேதியை அறிவித்துவிட்ட நிலையில் நித்யா மேனன் தந்த இந்த சிக்கலால் படப்பிடிப்பை நடத்துவதில் பிரச்சனை வந்துள்ளது. நித்யாவிடம் பேசி சமாதானம் செய்ய முயற்சிக்கிறார்களாம். தனுஷிற்கு இடையில் உடல்நிலை சரியில்லாமல் போனதால்தான் இந்த நிலை என்று சொல்லி புரிய வைக்க முயற்சிகள் நடக்கிறதாம். நித்யா சமாதானம் ஆவாரா இல்லையா என்பது இனிமேல்தான் தெரியும் என கோலிவுட் தகவல்கள் தெரிவிக்கின்றன.