'சல்லியர்கள்' படத்தை திரையிட தியேட்டர் இல்லை: தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி வேதனை | ரஜினிகாந்த்தின் ஆசைகள் 2026ல் நிறைவேறுமா? | இளையராஜா இசையில் பாடிய அறிவு, வேடன் | சென்னை பெரம்பூர் பின்னணி கதையில் ரோஜா | ரசிகர்களை சந்தித்த ரஜினி, அட்வைஸ் செய்த கமல், புதுப்புது அறிவிப்புகள், போஸ்டர்கள் : களைகட்டிய 2026 துவக்கம் | 'மார்க்' டப்பிங் படத்துடன் ஆரம்பமான 2026 வெளியீடுகள் | ரஜினி 173... அஸ்வத் மாரிமுத்துவிற்கு அடிக்கிறது அதிர்ஷ்டம் | 2026ல் எதிர்பார்க்கப்படும் படங்கள் : வசூல் சாதனை புரியுமா ? | ரஜினி 173, கமல் 237, அஜித் 64, தனுஷ் 55 : பொங்கலுக்குள் அறிவிப்புகள் வருமா? | அடுத்தடுத்து மேனேஜர்களை நீக்கிய விஷால், ரவிமோகன் |

மலையாள திரை உலகில் சமீப காலமாக இரண்டு கதாநாயகிகள் இளைஞர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வருகிறார்கள். வெற்றி படங்களில் நடித்து அடுத்த கட்டத்திற்கு முன்னேறி வருகிறார்கள். அவர்களில் ஒருவர் மமிதா பைஜூ. இன்னொருவர் அனஸ்வரா ராஜன். இவர்கள் இருவருமே ஒரே காலகட்டத்தில் சினிமாவில் நுழைந்தவர்கள் தான். இதில் பிரேமலு படத்திற்கு முன்பே அனஸ்வரா ராஜன் ரசிகர்கள் மத்தியில் ரொம்பவே பிரபலமானவர். பிரேமலு வெற்றிக்குப் பிறகுதான் மமிதா பைஜூ அடுத்த கட்டத்திற்கு நகர்ந்து இருக்கிறார். தற்போது விஜய் படத்தில் நடித்து வரும் அளவிற்கு முன்னேறி இருக்கிறார்.
அனஸ்வராவும் மமிதாவும் 'சூப்பர் சரண்யா' என்கிற படத்தில் ஒன்றாக இணைந்து நடித்திருந்தார்கள். ஆனால் இப்போது அவர்கள் இருவருமே வளர்ந்து வருவதால் இருவருக்குள்ளும் போட்டி ஏற்பட்டுள்ளது என்றும் இருவரும் எதிரிகள் போல ஒருவருக்கொருவர் பேசிக்கொள்வது இல்லை என்றும் சோசியல் மீடியாவில் ஒரு செய்தி பரவி வருகிறது.
இந்த நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் அனஸ்வரர் ராஜன் கூறும்போது, “நானும் மமிதா பைஜூவும் இதயபூர்வமான நட்புடன் பழகி வருகிறோம். நாங்கள் போட்டியாளர்கள் அல்ல. இன்னும் சொல்லப்போனால் எங்கள் குரூப்பில் இருக்கும் மேத்யூ தாமஸ் நஸ்லேன், மமிதா உள்ளிட்ட அனைவருமே யாரும் யாரையும் போட்டியாக கருதுவதில்லை. எங்களுக்கு கிடைக்கும் வாய்ப்பை பயன்படுத்தி அதில் எப்படி சிறப்பாக எங்களை வெளிப்படுத்த முடியும் என்பதை தான் பார்க்கிறோம். எதனால் இப்படி ஒரு செய்தி பரவியது என்று தெரியவில்லை” என கூறியுள்ளார்.