'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
மலையாள திரை உலகில் சமீப காலமாக இரண்டு கதாநாயகிகள் இளைஞர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வருகிறார்கள். வெற்றி படங்களில் நடித்து அடுத்த கட்டத்திற்கு முன்னேறி வருகிறார்கள். அவர்களில் ஒருவர் மமிதா பைஜூ. இன்னொருவர் அனஸ்வரா ராஜன். இவர்கள் இருவருமே ஒரே காலகட்டத்தில் சினிமாவில் நுழைந்தவர்கள் தான். இதில் பிரேமலு படத்திற்கு முன்பே அனஸ்வரா ராஜன் ரசிகர்கள் மத்தியில் ரொம்பவே பிரபலமானவர். பிரேமலு வெற்றிக்குப் பிறகுதான் மமிதா பைஜூ அடுத்த கட்டத்திற்கு நகர்ந்து இருக்கிறார். தற்போது விஜய் படத்தில் நடித்து வரும் அளவிற்கு முன்னேறி இருக்கிறார்.
அனஸ்வராவும் மமிதாவும் 'சூப்பர் சரண்யா' என்கிற படத்தில் ஒன்றாக இணைந்து நடித்திருந்தார்கள். ஆனால் இப்போது அவர்கள் இருவருமே வளர்ந்து வருவதால் இருவருக்குள்ளும் போட்டி ஏற்பட்டுள்ளது என்றும் இருவரும் எதிரிகள் போல ஒருவருக்கொருவர் பேசிக்கொள்வது இல்லை என்றும் சோசியல் மீடியாவில் ஒரு செய்தி பரவி வருகிறது.
இந்த நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் அனஸ்வரர் ராஜன் கூறும்போது, “நானும் மமிதா பைஜூவும் இதயபூர்வமான நட்புடன் பழகி வருகிறோம். நாங்கள் போட்டியாளர்கள் அல்ல. இன்னும் சொல்லப்போனால் எங்கள் குரூப்பில் இருக்கும் மேத்யூ தாமஸ் நஸ்லேன், மமிதா உள்ளிட்ட அனைவருமே யாரும் யாரையும் போட்டியாக கருதுவதில்லை. எங்களுக்கு கிடைக்கும் வாய்ப்பை பயன்படுத்தி அதில் எப்படி சிறப்பாக எங்களை வெளிப்படுத்த முடியும் என்பதை தான் பார்க்கிறோம். எதனால் இப்படி ஒரு செய்தி பரவியது என்று தெரியவில்லை” என கூறியுள்ளார்.