தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் | ஜனநாயகனை விட பராசக்திக்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா? - திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | நீலாம்பரி போல கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பேன் ; நமீதா விருப்பம் | நாய்களை விலைக்கு வாங்காதீர்கள்.. தத்தெடுங்கள் ; ஷாலினி பாண்டே கோரிக்கை | படங்களின் லாப நட்ட கணக்கை ஏன் வெளியே சொல்ல வேண்டும் ? நிவின்பாலி கேள்வி | விஜய் இதை பார்த்தால் நிச்சயம் ரசிப்பார் ; மோகன்லால் கொடுத்த கிரீன் சிக்னல் | கர்மா பற்றி எனக்கு பாடம் எடுக்காதீர்கள் ; நடிகர் விநாயகன் காட்டம் | 2025ல் வெளியான நேரடி தமிழ்ப் படங்கள் பட்டியல்... |

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் ஞானவேல் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் வேட்டையன். வரும் அக்டோபர் 10ம் தேதி இந்த படம் வெளியாக உள்ளது. அனிருத் இசையமைத்துள்ள இந்த படத்தில் இருந்து சமீபத்தில் வெளியான மனசிலாயோ பாடல் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் அதைத் தொடர்ந்து வெளியான ஒரு டீசரில் ரஜினிகாந்த் என்கவுன்டர் ஸ்பெசலிஸ்ட் ஆக இது நடித்துள்ளார் என அதிகாரப்பூர்வமாக அவரது கதாபாத்திரம் வெளிப்பட்டது.
இதற்கு முன்பு தர்பார் படத்திலும் கூட ரஜினிகாந்த் இது போன்ற ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். ஆனால் அதிலிருந்தும் இதற்கு முன்பு பல படங்களில் என்கவுன்டர் போலீஸ் அதிகாரிகள் காட்டப்பட்டதற்கு முற்றிலும் மாறாகவும் இதில் ரஜினிகாந்தின் கதாபாத்திரம் வேறுபடுத்திக் காட்டப்பட்டுள்ளதாக சமீபத்தில் கூறியுள்ளார் இயக்குனர் ஞானவேல்.
இந்த கதாபாத்திரம் பற்றி மேலும் அவர் கூறும்போது, “ஜெயிலர் படத்தின் வெற்றிக்கு பிறகு ரஜினி சாரின் மீதான எதிர்பார்ப்பு இன்னும் அதிகரித்துள்ளது. அதை ஈடு கட்டும் விதமாக வேட்டையன் படத்தில் பாடல்களும் சண்டைக் காட்சிகளும் இருக்கின்றன. அதேசமயம் அதன் மூலம் நான் என்ன சொல்ல விரும்புகிறானோ அதிலிருந்து விலகிச் செல்லவும் இல்லை. முந்தைய படங்களில் நாம் பார்த்த என்கவுன்டர் அதிகாரிகளிலிருந்து இது எப்படி வித்தியாசப்படுகிறது என்றால் இதில் என்கவுன்டர் அதிகாரிகளின் பின்புல கதைகளை பற்றி சொல்லி இருக்கிறோம். என்கவுன்டர் குறித்த அவர்களது எண்ண ஓட்டங்கள் எப்படி இருக்கும் என்பதன் மீது வெளிச்சம் பாய்சி இருக்கிறோம்” என்று கூறியுள்ளார்.