ஹீரோவான கேஜேஆர் ஸ்டுடியோஸ் தயாரிப்பாளர் ராஜேஷ்! விளையாட்டு வீரராக நடிக்கிறார்!! | 'தக்லைப்' படத்தில் எனது கேரக்டர் விமர்சிக்கப்படும்! - திரிஷா வெளியிட்ட தகவல் | கேரளாவில் ஜெயிலர்-2 படப்பிடிப்பை முடித்துவிட்டு சென்னை திரும்பிய ரஜினி! | முழுக்க முழுக்க புதுமுகங்களை வைத்து படம் இயக்கும் மணிரத்னம்! | மீண்டும் தள்ளிப்போனது 'படை தலைவன்' ரிலீஸ் | 'ஸ்பிரிட்' படத்தை விட்டு வெளியேறிய தீபிகா படுகோனே! | அப்துல் கலாம் வாழ்க்கை வரலாற்றில் தனுஷ் | இலங்கையில் படமாகும் 'மதராஸி' பட கிளைமாக்ஸ்! | கமல் 237வது படத்தின் படப்பிடிப்பு எப்போது? புது தகவல் | சிவகார்த்திகேயன் கேட்டால் நகைச்சுவை வேடத்தில் நடிப்பீர்களா சூரி? சூரியின் பதில் இதோ.. |
தமிழில், நிமிர்ந்து நில், என்னை அறிந்தால், உத்தம வில்லன் உள்ளிட்ட படங்களில் நடித்த பார்வதி நாயர், அண்மையில் வெளியான கோட் திரைப்படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவர் சென்னையில் நுங்கம்பாக்கம் ஸ்டெர்லிங் சாலையில் உள்ள பகுதியில் வசித்து வருகிறார். கடந்த ஆண்டு தனது வீட்டில் விலை மதிப்புள்ள லேப்டாப், செல்போன், 2 கைக்கடிகாரங்கள் உள்ளிட்ட பொருட்கள் திருடப்பட்டுள்ளதாக நுங்கம்பாக்கம் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்திருந்தார். மேலும் இந்த பொருட்களை தனது வீட்டில் இரண்டு வருடமாக பணிபுரிந்து வந்த சுபாஷ் என்ற நபர் திருடிச் சென்றதாக குறிப்பிட்டிருந்தார். இதனடிப்படையில் அந்த நபர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
இதனிடையே சுபாஷும், தேனாம்பேட்டை போலீஸ் ஸ்டேஷனில் பார்வதி நாயர் உள்ளிட்ட 7 பேர் மீது புகார் அளித்திருந்தார். அதில், தன்னை தாக்கி கொடுமைப்படுத்தியதாக கூறியிருந்தார். ஆனால், புகார் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறி சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் அவர் வழக்கு தொடுத்தார்.
இந்த நிலையில், நீதிமன்ற உத்தரவுப்படி, பார்வதி நாயர், அவரது உதவியாளரும் அயலான் திரைப்பட தயாரிப்பாளருமான கொடப்பாடி ராஜேஷ் உள்ளிட்டோர் மீது 3 பிரிவுகளின் கீழ் தேனாம்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.