‛கில்லர்' முதல்கட்ட படப்பிடிப்பை முடித்துவிட்டு ‛ஜெயிலர்-2'வில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | காரில் கோளாறு: ஷாரூக்கான், தீபிகா படுகோனே மீது வழக்கு | ‛வார் - 2' படம் தோல்வி அடைந்ததால் ஜூனியர் என்டிஆரின் அடுத்த படத்தை கைவிட்ட நிறுவனம்! | எனது சொகுசு பங்களா வீடியோவை உடனே நீக்குங்கள்! - ஆலியா பட் வைத்த ஆவேச கோரிக்கை | 23 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் ‛ரன்' | சிவகார்த்திகேயனுக்கு போட்டியா : ‛கேபிஒய்' பாலா பதில் | பிளாஷ்பேக்: திகைக்க வைக்கும் 'த்ரில்லர்' திரைப்படத்தின் நாயகனாக எம் என் நம்பியார் நடித்த “திகம்பர சாமியார்” | லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தின் ‛பர்ஸ்ட் பன்ச்' எப்படி இருக்கு? | மகுடம் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது! | ஷாலின் சோயாவின் இயக்குனர் ஆசை! |
தமிழில் கமல்ஹாசனின் 'உத்தமவில்லன்', அஜித்குமாரின் 'என்னை அறிந்தால்', விஜய்யின் 'தி கோட்' படங்களில் நடித்தவர் பார்வதி நாயர். தமிழை விட மலையாளத்தில் பல படங்களில் நாயகியாக நடித்துள்ளார். இவருக்கும் சென்னையை சேர்ந்த தொழிலதிபர் ஆஷ்ரித் அசோக் என்பவருக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது. திருமண வாழ்க்கையில் அடியெடுத்து வைக்கும் இவர்கள், காதலித்து இரு வீட்டாரின் சம்மதத்துடன் திருமணம் செய்ய இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
நிச்சயதார்த்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள பார்வதி நாயர், 'ஒவ்வொரு ஏற்ற இறக்கங்களிலும், நீங்கள் என்னுடன் நின்றீர்கள். இன்று, வாழ்நாள் முழுவதும் அன்பு, நம்பிக்கை மற்றும் அசைக்க முடியாத ஆதரவிற்கு நான் ஆம் என்று சொல்கிறேன். நீங்கள் இல்லாமல் இந்தப் பயணம் ஒரே மாதிரியாக இருக்காது' எனவும் பதிவிட்டுள்ளார்.
வரும் பிப்ரவரி 6ம் தேதி முதல் மெஹந்தி, ஹல்தி, சங்கீத் உள்ளிட்ட சடங்குகள் நடக்கிறது. அசோக், சென்னையில் தொழிலதிபராக இருந்தாலும், அவரது பூர்வீகம் ஹைதராபாத் என தெரியவந்துள்ளது. பார்வதி கேரளாவையும், அசோக் ஹைதராபாத்தையும் சேர்ந்தவராக இருந்தாலும் இருவரும் தங்களது திருமணத்தை சென்னையில் கோலாகலமாக நடத்த திட்டமிட்டுள்ளனர்.
அதன்படி, இவர்களது திருமணம் அடுத்த வாரம் சென்னையில் நடைபெறுகிறது. திருமணத்தை அடுத்து கேரளாவில் வரவேற்பு நிகழ்ச்சி நடக்கிறது.