2026 கோடை விடுமுறையில் திரைக்கு வரும் விஷாலின் 'மகுடம்'! | காதலருடன் பிரேக்ப்பா? வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த பிரியா பவானி சங்கர்! | அருள் நிதியின் 'டிமான்டி காலனி -3' படத்தின் போஸ்டர் வெளியானது! | வித் லவ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | புத்தாண்டு பிறந்தாச்சு..... ஓடிடியில் புதுப்படங்களும் வரிசை கட்ட ஆரம்பிச்ச்சாச்சு....! | ‛ஸ்பிரிட்' படத்தின் முதல் பார்வை வெளியீடு | 'சல்லியர்கள்' படத்தை திரையிட தியேட்டர் இல்லை: தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி வேதனை | ரஜினிகாந்த்தின் ஆசைகள் 2026ல் நிறைவேறுமா? | இளையராஜா இசையில் பாடிய அறிவு, வேடன் | சென்னை பெரம்பூர் பின்னணி கதையில் ரோஜா |

தமிழில் கமல்ஹாசனின் 'உத்தமவில்லன்', அஜித்குமாரின் 'என்னை அறிந்தால்', விஜய்யின் 'தி கோட்' படங்களில் நடித்தவர் பார்வதி நாயர். தமிழை விட மலையாளத்தில் பல படங்களில் நாயகியாக நடித்துள்ளார். இவருக்கும் சென்னையை சேர்ந்த தொழிலதிபர் ஆஷ்ரித் அசோக் என்பவருக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது. திருமண வாழ்க்கையில் அடியெடுத்து வைக்கும் இவர்கள், காதலித்து இரு வீட்டாரின் சம்மதத்துடன் திருமணம் செய்ய இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
நிச்சயதார்த்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள பார்வதி நாயர், 'ஒவ்வொரு ஏற்ற இறக்கங்களிலும், நீங்கள் என்னுடன் நின்றீர்கள். இன்று, வாழ்நாள் முழுவதும் அன்பு, நம்பிக்கை மற்றும் அசைக்க முடியாத ஆதரவிற்கு நான் ஆம் என்று சொல்கிறேன். நீங்கள் இல்லாமல் இந்தப் பயணம் ஒரே மாதிரியாக இருக்காது' எனவும் பதிவிட்டுள்ளார்.
வரும் பிப்ரவரி 6ம் தேதி முதல் மெஹந்தி, ஹல்தி, சங்கீத் உள்ளிட்ட சடங்குகள் நடக்கிறது. அசோக், சென்னையில் தொழிலதிபராக இருந்தாலும், அவரது பூர்வீகம் ஹைதராபாத் என தெரியவந்துள்ளது. பார்வதி கேரளாவையும், அசோக் ஹைதராபாத்தையும் சேர்ந்தவராக இருந்தாலும் இருவரும் தங்களது திருமணத்தை சென்னையில் கோலாகலமாக நடத்த திட்டமிட்டுள்ளனர்.
அதன்படி, இவர்களது திருமணம் அடுத்த வாரம் சென்னையில் நடைபெறுகிறது. திருமணத்தை அடுத்து கேரளாவில் வரவேற்பு நிகழ்ச்சி நடக்கிறது.