ட்வின்ஸை வரவேற்க தயாராகும் ராம்சரண், உபாசனா தம்பதி | முத்தக்காட்சிக்கு செட் ஆகாத விஷ்ணு விஷால் | விவசாயத்தை விட சினிமா எடுப்பது கஷ்டம் : புதுமுக இயக்குனர் | கவிஞர் வாலி விருது பெறும் கங்கை அமரன் | எழுத்தாளர் பூமணியின் கசிவு கதையில் நடித்த எம்.எஸ்.பாஸ்கர் | மீண்டும் ஹீரோவான ஆனந்த்ராஜ் | போலீஸ் கமிஷனரிடம் அம்பிகா வைத்த கோரிக்கை | போதை பொருள் விவகாரம் : ஸ்ரீகாந்த், கிருஷ்ணாவுக்கு சம்மன் | பிளாஷ்பேக் : சபரிமலையில் படப்பிடிப்பு ; நடிகைகளுக்கு அபராதம் | பிளாஷ்பேக் : சினிமாவான கல்கியின் சமூக கதை |

தமிழில் ஹே சினாமிகா என்ற படத்திற்கு பிறகு காந்தா என்ற படத்தை தயாரித்து நடிக்கப் போகிறார் துல்கர் சல்மான். கடந்த அக்டோபர் மாதத்தில் தெலுங்கில் வெங்கி அட்லூரி இயக்கத்தில் அவர் நடித்து திரைக்கு வந்த லக்கி பாஸ்கர் என்ற படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக மீனாட்சி சவுத்ரி நடித்திருந்தார். தற்போது மீண்டும் ஒரு தெலுங்கு படத்தில் நடிக்கிறார் துல்கர் சல்மான். அப்படத்தின் பூஜை நேற்று ஐதராபாத்தில் நடைபெற்றுள்ளது.
ஆகாம்சலோ ஒகதாரா என்று பெயர் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தை பவன் சதினேனி என்பவர் இயக்குகிறார். சாத்விகா வீரவள்ளி நாயகியாக நடிக்கும் இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என நான்கு மொழிகளில் தயாராகிறது. இந்த படத்தை இந்த ஆண்டு இறுதியில் வெளியிட்ட திட்டமிட்டுள்ளார்கள். லக்கி பாஸ்கர் ஹிட்டுக்கு பிறகு துல்கர் சல்மான் நடிக்கும் படம் என்பதால் இப்படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.




