சமந்தாவுக்கு விலை உயர்ந்த திருமண பரிசு கொடுத்த ராஜ் நிடிமொரு | ‛கோழிப்பண்ணை செல்லத்துரை' நாயகனின் அடுத்த படம் ‛ஹைக்கூ' | அஜித்தின் கார் ரேஸை ஆவண படமாக்கும் ஏ.எல்.விஜய் | லண்டன் லெஸ்டர் சதுக்கத்தில் ஷாருக்கான், கஜோலுக்கு சிலை | ரஜினி படத்திற்கு இசையமைக்கும் சாய் அபயன்கர் | ரவி தேஜா,பிரியா பவானி சங்கர் படத்தின் தலைப்பு இருமுடி? | பராசக்தி படத்தின் இசை வெளியீட்டு விழா எங்கே? | அரசன் படத்தின் படப்பிடிப்பு பற்றிய புதிய அப்டேட் | பாலகிருஷ்ணாவின் 'அகண்டா 2' தள்ளிப் போனது ஏன் ? | 100 கோடி வசூல் கடந்த தனுஷின் 'தேரே இஷ்க் மெய்ன்' |

கேரளாவில் ஹேமா கமிட்டி அறிக்கைக்கு பிறகு மலையாள நடிகர்கள், இயக்குனர்களுக்கு எதிரான பாலியல் புகார்கள் அதிகரித்து வருகிறது. பலர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் நேற்று சினிமா பெண் கலைஞர்கள் அமைப்பினர் கேரள முதல்வர் பினராயி விஜயனை சந்தித்து பேசினார்கள். இதில் நடிகைகள் ரேவதி, ரீமா கல்லிங்கல், இயக்குனர்கள் தீதி தாமோதரன், பீனா பால் ஆகியோர் உடனிருந்தனர்.
இந்த சந்திப்பு குறித்து ரீமா கலிங்கல் கூறும்போது "ஹேமா கமிட்டியில் தொடர் நடவடிக்கைகள் எடுப்பது குறித்து எங்களது கருத்துக்களை கூறுவதற்காக முதல்வரை சந்தித்தோம். தற்போது மலையாள சினிமாவில் ஏற்பட்டுள்ள பிரச்னைகளை எவ்வாறு தீர்ப்பது என்பது குறித்து நாங்கள் தீவிரமாக ஆலோசித்து வருகிறோம். கமிட்டி அறிக்கையில் வாக்குமூலம் கொடுத்த நடிகைகளின் பெயர் விபரங்களை வெளியிடக்கூடாது என்று முதல்வரிடம் வலியுறுத்தினோம்" என்றார்.




