10 வருடங்களுக்குப் பிறகு இரண்டாம் தயாரிப்பு நிறுவனத்தை ஆரம்பித்த சூர்யா குடும்பம் | டிசம்பர் 12ல் 'அகண்டா 2'வை வெளியிட தீவிர முயற்சி | லோகேஷ் கனகராஜ், அமீர் கான் படம், பேச்சுவார்த்தையில்… | வெளியீட்டிற்குத் தடை இருந்தாலும் இன்று 'வா வாத்தியார்' நிகழ்ச்சி | ஜப்பானில் வெளியாகும் புஷ்பா 2 | தனுஷ் 54வது படத்தின் படப்பிடிப்பை நிறைவு செய்த சுராஜ் வெஞ்சாரமூடு | டாக்சிக் படத்தில் இரண்டு இசையமைப்பாளர்கள் | தொடர் சிக்கலில் சிங்கிள் தியேட்டர்கள் : விடிவுகாலம் பிறக்குமா? | 23வது சென்னை திரைப்பட விழாவில் தமிழ் 12 படங்கள் | ஒரே ஒரு ஹிட்டுக்காக காத்திருக்கும் ஜி.வி.பிரகாஷ் |

தென்னிந்திய சினிமாவில் 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர் ரோஜா ரமணி. 1967ல் வெளியான 'பக்த பிரஹலாதா' என்ற தெலுங்குத் திரைப்படத்தில் அவர் பிரகலாதா வேடத்தில் நடித்தார். அப்போது அவருக்கு வயது 5 . இந்தப் படம் பெரிய வெற்றி பெற்றது. பின்னர் இந்த படம் தமிழிலும் வெளியானது. மேலும் இதில் குழந்தை நட்சத்திரமாக நடித்ததற்காக தேசிய விருதையும் பெற்றார்.
இந்தப் படத்தில் நடிக்கும் வரை ரோஜா ரமணி ஒரு திரைப்படம் கூட பார்த்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது. சென்னையில் பிறந்த ரோஜா ரமணி படப்பிடிப்பை வேடிக்கை பார்க்க சென்ற இடத்தில் ஏவிஎம் செட்டியார் கண்ணில் பட்டு நடிகையாக அறிமுகமானார். ஐந்து வயது முதல் 12 வயது வரை சுமார் 80 படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார். அதன் பிறகு நாயகியாக நடித்தார்.