தமிழில் அடுத்தடுத்து அறிமுகமாகும் மலையாள நடிகர்கள் | தென்னிந்திய ரசிகர்களை குறை சொல்லும் சல்மான் கான் | ராஷ்மிகாவின் வாழ்நாள் பயம் இதுதான் | ரசிகரின் தந்திர கேள்வியும்... சமந்தாவின் சாதுர்ய பதிலும்...! | துல்கர் சல்மானை துப்பாக்கி முனையில் விரட்டிய வீட்டு உரிமையாளர் | மகளை பாடகி ஆக்கிய பிரித்விராஜ் | எம்புரான் தெலுங்கு ரீமேக்கில் சிரஞ்சீவி, சல்மான் கான்? : இயக்குனர் பிரித்விராஜ் பதில் | எல் 2 எம்புரான் - முதல் நாள் வசூல் எவ்வளவு? | 40 வயதைக் கடந்தும் திருமணத்தைத் தள்ளி வைக்கும் நடிகர்கள் | வீர தீர சூரன் முதல் நாள் வசூல் |
தென்னிந்திய சினிமாவில் 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர் ரோஜா ரமணி. 1967ல் வெளியான 'பக்த பிரஹலாதா' என்ற தெலுங்குத் திரைப்படத்தில் அவர் பிரகலாதா வேடத்தில் நடித்தார். அப்போது அவருக்கு வயது 5 . இந்தப் படம் பெரிய வெற்றி பெற்றது. பின்னர் இந்த படம் தமிழிலும் வெளியானது. மேலும் இதில் குழந்தை நட்சத்திரமாக நடித்ததற்காக தேசிய விருதையும் பெற்றார்.
இந்தப் படத்தில் நடிக்கும் வரை ரோஜா ரமணி ஒரு திரைப்படம் கூட பார்த்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது. சென்னையில் பிறந்த ரோஜா ரமணி படப்பிடிப்பை வேடிக்கை பார்க்க சென்ற இடத்தில் ஏவிஎம் செட்டியார் கண்ணில் பட்டு நடிகையாக அறிமுகமானார். ஐந்து வயது முதல் 12 வயது வரை சுமார் 80 படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார். அதன் பிறகு நாயகியாக நடித்தார்.