ரசிகர் மன்றம் எதற்கு... ஊரார் பிள்ளையை கெடுக்க விரும்பவில்லை : அரவிந்த்சாமி பளீச் | ரீல் அல்ல ரியல் : விபத்து ஏற்படுத்திய லாரியை சேஸிங் செய்து மடக்கிய நவ்யா நாயர் | விஜய் தவறான ரூட்டில் செல்கிறார் - மோகன்.ஜி வருத்தம் | ரூ.70 கோடி பட்ஜெட் படத்தில் ஆர்யா | இறுதிகட்ட கங்குவா பணியில் இணைந்த சூர்யா | விடாமுயற்சி படத்தில் இன்னும் ஒரு பாடல் காட்சி மீதம் | 'எமர்ஜென்சி' விவகாரம் : கங்கனாவிற்கு நீதிமன்றம் நோட்டீஸ் | பிளாஷ்பேக்: முதல் ஆக்ஷன் ஹீரோயின் | ஹிட்லர் கருத்து சொல்ல மாட்டார்: விஜய் ஆண்டனி | புற்று நோயாளிகளுக்கு உதவ இசை நிகழ்ச்சி நடத்தும் பரத்வாஜ் |
கேரளாவில் ஹேமா கமிட்டி அறிக்கைக்கு பிறகு மலையாள நடிகர்கள், இயக்குனர்களுக்கு எதிரான பாலியல் புகார்கள் அதிகரித்து வருகிறது. பலர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் நேற்று சினிமா பெண் கலைஞர்கள் அமைப்பினர் கேரள முதல்வர் பினராயி விஜயனை சந்தித்து பேசினார்கள். இதில் நடிகைகள் ரேவதி, ரீமா கல்லிங்கல், இயக்குனர்கள் தீதி தாமோதரன், பீனா பால் ஆகியோர் உடனிருந்தனர்.
இந்த சந்திப்பு குறித்து ரீமா கலிங்கல் கூறும்போது "ஹேமா கமிட்டியில் தொடர் நடவடிக்கைகள் எடுப்பது குறித்து எங்களது கருத்துக்களை கூறுவதற்காக முதல்வரை சந்தித்தோம். தற்போது மலையாள சினிமாவில் ஏற்பட்டுள்ள பிரச்னைகளை எவ்வாறு தீர்ப்பது என்பது குறித்து நாங்கள் தீவிரமாக ஆலோசித்து வருகிறோம். கமிட்டி அறிக்கையில் வாக்குமூலம் கொடுத்த நடிகைகளின் பெயர் விபரங்களை வெளியிடக்கூடாது என்று முதல்வரிடம் வலியுறுத்தினோம்" என்றார்.