படம் 1% ஏமாற்றினாலும் என் வீடுதேடி வரலாம்: 'தி ராஜா சாப்' இயக்குனர் மாருதி பேச்சு | பிரியங்கா மோகனின் கன்னட படம் '666 ஆப்ரேஷன் ட்ரீம் தியேட்டர்' பர்ஸ்ட்லுக் வெளியீடு | பிரபாஸின் 'தி ராஜா சாப்' படத்தின் டிரைலர் இன்று வெளியாகவில்லை! வதந்தியை தெளிவுபடுத்திய படக்குழு! | விக்ரம் பிரபுவின் 'சிறை' படத்தை பாராட்டிய மாரி செல்வராஜ்! | 'டாக்சிக்'-ல் எலிசபெத் ஆக ஹூமா குரேஷி | ரஜினியை வைத்து முதல் மரியாதை போன்ற படம் இயக்க ஆசை! - சுதா கொங்கரா | 'பராசக்தி' படத்தின் இசை வெளியீட்டு விழா, எங்கே, எப்போது? | ரிலீசில் ரிகார்டு!: வசூலில் பெரும்பாடு: தமிழ் சினிமாவில் ரூ.2000 கோடியை ‛‛காலி'' செய்த 2025 | 'டாக்சிக்' படத்தின் அனுபவம் குறித்து ருக்மணி வசந்த்! | விஜய் முடிவை மாத்தணும்.. மீண்டும் நடிக்கணும்: நடிகர் நாசர் கோரிக்கை |

தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கும், தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்திற்கும் இடையில் தற்போது மோதல் போக்கு ஏற்பட்டுள்ளது. சமீபத்தில் தனுஷ் மற்றும் 5 நடிகர்கள், தயாரிப்பாளர்களிடம் முன் பணம் பெற்றுக் கொண்டு நடிக்காமல் இருக்கிறார்கள். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க இருக்கிறோம் என்றும் பல்வேறு பிரச்சினைகளுக்காக முழு வேலை நிறுத்தம் செய்ய இருக்கிறோம் என்று தயாரிப்பாளர் சங்கம் அறிவித்தது. எங்களை கேட்காமல் இப்படி ஒரு முடிவை எடுத்து தவறு என்ற நடிகர் சங்கம் பதிளித்தது.
இந்த நிலையில் இதுகுறித்து ஆலோசிக்க நேற்று நடிகர் சங்க ஆலோசனை கூட்டம் சங்க தலைவர் நாசர் தலைமையில் நடந்தது. பொருளாளர் கார்த்தி, துணைத்தலைவர்கள் பூச்சி முருகன், கருணாஸ் மற்றும் விஜய்சேதுபதி, ஆர்யா, பிரசாந்த், விஜய் ஆண்டனி, தியாகராஜன், சிபிராஜ், கவுதம் கார்த்திக், ராஜ் கிரண், யோகிபாபு, நடிகைகள் லதா, ரோகிணி, கோவை சரளா, குட்டி பத்மினி, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் தயாரிப்பாளர் சங்கம் அறிவித்துள்ள சினிமா ஸ்டிரைக், நடிகர் நடிகைகள் சம்பள குறைப்பு உள்ளிட்ட பல விஷயங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. ஆனாலும் எந்த ஒரு உறுதியான முடிவும் எடுக்காமல் கலைந்தது. விரைவில் முடிவுகள் அறிவிக்கப்படும் என்று தெரிவித்தனர்.