சம்பள விஷயத்தில் 'கண்டிஷன்' போடும் நடிகை | அவமானங்களுக்கு 'ரியாக்ட்' பண்ணாதீர்கள்: நடிகர் சூரி 'அட்வைஸ்' | பாடல்களாய் உலகம் சுற்றுவேன் | 'கொம்புசீவி' தயாராகும் இன்னொரு தனுஷ் | உரிமைக்குரல், வானத்தைப்போல, மெய்யழகன் - ஞாயிறு திரைப்படங்கள் | பிளாஷ்பேக்: வித்தியாசமான தோற்றத்தில் விஜயகாந்த் நடித்து விஸ்வரூப வெற்றிகண்ட "வானத்தைப்போல" | தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு |

சமீபகாலமாக மறைந்த கலைஞர்களை மீண்டும் திரையில் நடிக்க வைப்பது அவர்களின் குரலை ஒலிக்க வைப்பது என ஏஐ என்ற தொழில்நுட்பத்தை திரையுலகினர் பயன்படுத்தி வருகிறார்கள். அந்த வகையில் ரஜினி நடித்த லால் சலாம் படத்தில் மறைந்த பாடல்கள் பம்பாய் பாக்யா மற்றும் சாகுல் ஹமீத் ஆகியோரின் குரலை ஏஐ தொழில்நுட்பத்தின் மூலம் கொண்டு வந்த நிலையில், கோட் படத்தில் விஜயகாந்தை திரையில் கொண்டு வந்திருப்பதோடு, இளையராஜாவின் மகள் பவதாரணி குரலையும் இதே டெக்னாலஜி மூலம் ஒரு பாடல் பாட வைத்திருந்தார்கள்.
அதையடுத்து தற்போது இந்தியன் 2 படத்தில் நடித்த மனோபாலா மற்றும் விவேக் ஆகிய இருவரும் மரணம் அடைந்து விட்டதை அடுத்து அவர்களுக்கு டப்பிங் கொடுப்பதற்கும் ஏஐ டெக்னாலஜியை பயன்படுத்தி உள்ளார்கள். லால் சலாம், கோட் படங்களுக்கு பணியாற்றிய அதே கிருஷ்ண சேத்தன் என்பவர்தான் இந்தியன் 2 படத்திலும் விவேக் மற்றும் மனோபாலா ஆகிய இருவரின் குரலில் டப்பிங் பேச வைத்திருக்கிறாராம்.