100 கோடிக்கு மேல் விற்கப்பட்டதா 'ஜனநாயகன்' ? | ரூ.10 கோடி டெபாசிட் செய்ய விஷாலுக்கு கோர்ட் உத்தரவு | விஜய் சேதுபதி, பூரி ஜெகன்னாத் படத்தின் படப்பிடிப்பு நிறைவு | ஒரு வருட இடைவெளிக்குப் பிறகு கீர்த்தி சுரேஷ் படம் | தெரு நாய்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்த நிவேதா பெத்துராஜ் | 2025 : 11 மாதங்களில் 250ஐக் கடக்கும் தமிழ்ப் பட வெளியீடுகள் | படம் இயக்க தயாராகும் கிர்த்தி ஷெட்டி | சிக்ஸ் பேக் மூலம் என்னை நானே செதுக்கி கொண்டேன் : மகத் சொல்கிறார் | 5 கேரக்டர்கள், 6 ஆண்டு உழைப்பு : ஒருவரே வேலை செய்த ஒன்மேன் | தனுஷின் ஹிந்தி படத்தில் இரண்டு கிளைமாக்ஸ் : கீர்த்தி சனோன் தகவல் |

சுந்தர்.சி இயக்கத்தில் வெளிவந்த அரண்மனை 1,2,3 ஆகிய பாகங்களின் வெற்றியைத் தொடர்ந்து தற்போது அரண்மனை படத்தின் 4ம் பாகத்தை இயக்கி நடித்துள்ளார் சுந்தர். சி. இதில் தமன்னா, ராஷி கண்ணா என இருவரும் கதாநாயகிகளாக நடிக்கின்றனர். யோகி பாபு, வி.டி.வி.கணேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ஹிப்ஹாப் ஆதி இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
இந்த படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே ஏப்ரல் மாத இறுதியில் இப்படம் திரைக்கு வரும் என கூறப்பட்டு வந்ததைத் தொடர்ந்து இப்போது இத்திரைப்படம் வருகின்ற ஏப்ரல் 26ம் தேதி அன்று திரைக்கு வருகிறது என இன்று தமிழ் புத்தாண்டை முன்னிட்டு அறிவித்துள்ளனர். மேலும், ஏற்கனவே ஏப்.,26ம் தேதியில் ஹரி இயக்கத்தில் விஷால் நடித்துள்ள 'ரத்னம்' படம் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.




