பணத்தை விட கதையே முக்கியம் - ஈஷா ரெப்பா | நானி படத்தை தமிழ், தெலுங்கில் இயக்கும் ஞானவேல் | விஜய் பிறந்தநாளில் 69 வது படத்தின் அறிவிப்பு வெளியாகிறது | ஸ்டார் படத்தில் பத்து பாடல்கள் | வாடிவாசல், புறநானூறு படங்கள் உருவாகுமா? - சூர்யா சொன்ன தகவல் | தமிழுக்கு வரும் ஆதியா பிரசாத் | மீண்டும் இணைந்த 'ஜோ' ஜோடி | காந்தியின் வாழ்க்கை தொடரில் இணைந்த ஹாலிவுட் நடிகர்கள் | கமல் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் லிங்குசாமி புகார் | ‛கூலி'க்கு இளையராஜா அனுப்பிய நோட்டீஸ் : ரஜினி கருத்து |
நடிகர்கள் ராகவா லாரன்ஸ், குக் வித் கோமாளி பாலா ஆகிய இருவரும் தொடர்ந்து சமூக சேவையில் ஈடுபட்டு வருகிறார்கள். சமீபத்தில் கணவனை இழந்த ஒரு பெண்ணுக்கு ஆட்டோ வாங்கி கொடுத்து உதவி செய்த அவர்கள், தற்போது கண் பார்வை இழந்த ஒரு சிறுவனின் சிகிச்சைக்கு பண உதவி செய்துள்ளார்கள். இதுகுறித்து நடிகர் பாலா ஒரு வீடியோவை இணையப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில், மாதேஸ்வரன் என்ற சிறுவனுக்கு விபத்து ஒன்றில் சிறு வயதிலேயே கண் பார்வை போய்விட்டது. அவனுக்கு அறுவை சிகிச்சை செய்ய பெற்றோரிடம் பணம் இல்லை என்பதால் அந்த சிறுவனுக்கு மீண்டும் கண் பார்வை கிடைப்பதற்காக நானும், ராகவா லாரன்ஸூம் இணைந்து அறுவை சிகிச்சைக்கு பண உதவி செய்துள்ளோம் என்று குறிப்பிட்டுள்ளார் பாலா. அவர்களின் இந்த நற்சேவைக்கு பாராட்டுகள் குவித்து வருகிறது.