மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
சென்னை, தரமணியில் இருந்த தமிழக அரசின் பிலிம் சிட்டி தற்போது முழுமையாக செயல்படவில்லை. அங்கு 'டைடல் பார்க்' வந்த பிறகு பிலிம் சிட்டியின் பெரும்பான்மையான இடங்கள் அதற்காக எடுத்துக் கொள்ளப்பட்டது. சில அரங்குகள் மட்டுமே இருந்த நிலையில் அதை யாரும் பயன்படுத்துவதும் இல்லை.
தமிழ் சினிமா மட்டுமல்லாது தென்னிந்திய சினிமாவுக்கே முதன்மையான இடமாக இருந்த சென்னையில் தற்போது சில தனியார் ஸ்டுடியோக்கள் மட்டுமே இருக்கின்றன. இந்நிலையில் சென்னை, பூந்தமல்லியில் 500 கோடி ரூபாய் செலவில் தமிழக அரசு சார்பில் அதிநவீன புதிய திரைப்பட நகரம் அமைக்கப்படும் என்ற அறிவிப்பை தமிழக முதல்வர் முக ஸ்டாலின் வெளியிட்டிருந்தார்.
அதை செயல்படுத்தும் விதமாக தற்போது அதற்கான வேலைகள் ஆரம்பமாகியுள்ளது. அதற்கான மாஸ்டர் பிளான் தயாரிப்பதற்கான ஆலோசகர்களை நியமிப்பதற்கான டெண்டர்களை தமிழ்நாடு உள்கட்டமைப்பு வாரியம் வெளியிட்டுள்ளது.
பிப்ரவரி 26ம் தேதி 3 மணிக்குள் டெண்டர்களை சமர்ப்பிக்கவும், அன்று மதியம் 3.30க்கு டெண்டர்களை திறக்கவும் உள்ளதாக அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. டெண்டருக்கு முந்தைய மீட்டிங் பிப்ரவரி 5ம் தேதி நடக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.