நன்றி சொல்ல வார்த்தைகள் போதவில்லை : அஜித் நெகிழ்ச்சி | ''எங்களுக்கு 'வாழ்க' சொன்னது போதும்! நீங்க எப்ப வாழப்போறீங்க...?'': துபாயில் அஜித் பேட்டி | என் குணம் இப்படி தான்... ஆசையை சொன்ன அதிதி ஷங்கர் | துருவ நட்சத்திரம் படத்திற்கு யாரும் உதவவில்லை: கவுதம் மேனன் வருத்தம் | வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்திய 'விடுதலை': சூரி நெகிழ்ச்சி | 'ஜெயம்' வேண்டாம்; ரவி போதும்: அறிக்கை வெளியிட்டு அறிவிப்பு | ராம் பொத்தினேனி படத்தில் மோகன்லால்? | மீண்டும் ரீ ரிலீஸ் ஆகும் பாட்ஷா! | ஜனவரி 17ல் தமிழில் வெளியாகும் பாலகிருஷ்ணாவின் 'டாக்கு மகாராஜ்' | முதல் நாள் வசூல்- வணங்கானை முந்திய விஷாலின் மதகஜராஜா! |
ஒரு காலத்தில் திரைப்படத் தயாரிப்பு என்றாலே தென்னக மாநிலங்களைப் பொறுத்தவரையில் சென்னை தான் மையமாக இருந்தது. அதன்பின் ஒவ்வொரு மொழியாக அவரவர் மாநிலங்களில் செயல்பட ஆரம்பித்தனர். இப்போது ஒரு மொழியில் வெளியாகும் பான் இந்தியா படங்களையும், டப்பிங் படங்களையும் அந்தந்த மாநிலங்களைச் சார்ந்த தயாரிப்பு நிறுவனங்கள், வினியோக நிறுவனங்கள் வாங்கி வெளியிட்டு வருகின்றன.
இந்நிலையில் தற்போது தெலுங்குத் திரையுலகத்தின் பெரிய தயாரிப்பு நிறுவனங்கள் தமிழிலும் படங்களைத் தயாரிக்க திட்டமிட்டு வருகின்றன. பிரபல தெலுங்கு தயாரிப்பாளரான தில் ராஜு கடந்த வருடம் விஜய் நடித்த 'வாரிசு' படத்தைத் தயாரித்த பிறகுதான் பல தெலுங்கு தயாரிப்பாளர்களுக்கும் தமிழிலும் படம் தயாரிக்க வேண்டும் என்ற எண்ணம் அதிகமாகியுள்ளதாகத் தெரிகிறது.
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடிக்க உள்ள அடுத்த படத்தை பிரபல தெலுங்கு தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம்தான் தயாரிக்கப் போகிறதாம். இதற்காக சென்னையில் புதிய அலுவலகம் ஒன்றையும் கடந்த வாரம் திறந்துவிட்டதாகச் சொல்கிறார்கள். அடுத்தடுத்து முன்னணி நடிகர்களின் படங்களைத் தயாரிக்க உள்ளார்களாம்.
அடுத்து 'ஆர்ஆர்ஆர்' படத்தைத் தயாரித்த டிவிவி தனய்யா தமிழில் படம் தயாரிக்க முன்னணி நடிகர்களுடன் பேசி வருகிறாராம். விஜய்யை வைத்து படம் தயாரிக்க அவர் பேசி வருவதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது. தமிழில் உள்ள முன்னணி நடிகர்கள் கேட்கும் சம்பளத்தை தெலுங்கு தயாரிப்பாளர்கள் தரத் தயாராக இருக்கிறார்களாம்.
தனுஷ் அடுத்து நடிக்க உள்ள அவரது 51வது படத்தை தெலுங்கு இயக்குனர் சேகர் கம்முலா இயக்க, தெலுங்கு தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
தமிழ் சினிமாவில் தயாரிப்பு நிறுவனங்கள் குறைந்து வரும் சூழலில் தெலுங்கு நிறுவனங்களின் ஆதிக்கம் கொஞ்சம் கொஞ்சமாக அதிகமாகும் எனத் தெரிகிறது.