ஹாட்ரிக் வெற்றி : மகிழ்ச்சியில் சிம்ரன் | ஜெயிலர் 2வில் யோகிபாபு | என்னை கொல்ல சதி நடக்குது: ஜாக்குவார் தங்கம் அலறல் | இடியாப்ப சிக்கலில் விஜயகாந்த் மகன் திரைப்படம் | நயன்தாராவுடன் இணையும் படத்திற்காக போட்டோஷூட் நடத்திய சிரஞ்சீவி! | தனுஷின் 'குபேரா' படத்தை 50 கோடிக்கு கைப்பற்றிய அமேசான் பிரைம்! | நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகும் சூர்யாவின் 'ரெட்ரோ' | 'கொம்பு சீவி' படத்திற்காக மதுரை வட்டார தமிழில் டப்பிங் பேசும் சண்முக பாண்டியன்! | விஜய்சேதுபதி நடித்துள்ள 'ஏஸ்' படத்தின் சென்சார் - ரன்னிங் டைம் வெளியானது! | ரவி மோகனிடம் மாதம் ரூ.40 லட்சம் ஜீவனாம்சம் கேட்கும் ஆர்த்தி ரவி |
சென்னை, தரமணியில் இருந்த தமிழக அரசின் பிலிம் சிட்டி தற்போது முழுமையாக செயல்படவில்லை. அங்கு 'டைடல் பார்க்' வந்த பிறகு பிலிம் சிட்டியின் பெரும்பான்மையான இடங்கள் அதற்காக எடுத்துக் கொள்ளப்பட்டது. சில அரங்குகள் மட்டுமே இருந்த நிலையில் அதை யாரும் பயன்படுத்துவதும் இல்லை.
தமிழ் சினிமா மட்டுமல்லாது தென்னிந்திய சினிமாவுக்கே முதன்மையான இடமாக இருந்த சென்னையில் தற்போது சில தனியார் ஸ்டுடியோக்கள் மட்டுமே இருக்கின்றன. இந்நிலையில் சென்னை, பூந்தமல்லியில் 500 கோடி ரூபாய் செலவில் தமிழக அரசு சார்பில் அதிநவீன புதிய திரைப்பட நகரம் அமைக்கப்படும் என்ற அறிவிப்பை தமிழக முதல்வர் முக ஸ்டாலின் வெளியிட்டிருந்தார்.
அதை செயல்படுத்தும் விதமாக தற்போது அதற்கான வேலைகள் ஆரம்பமாகியுள்ளது. அதற்கான மாஸ்டர் பிளான் தயாரிப்பதற்கான ஆலோசகர்களை நியமிப்பதற்கான டெண்டர்களை தமிழ்நாடு உள்கட்டமைப்பு வாரியம் வெளியிட்டுள்ளது.
பிப்ரவரி 26ம் தேதி 3 மணிக்குள் டெண்டர்களை சமர்ப்பிக்கவும், அன்று மதியம் 3.30க்கு டெண்டர்களை திறக்கவும் உள்ளதாக அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. டெண்டருக்கு முந்தைய மீட்டிங் பிப்ரவரி 5ம் தேதி நடக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.