விரைவில் 'பாகுபலி' அனிமேஷன் சீரிஸ் | 'சங்கமித்ரா' படம் உருவாகும், சுந்தர் சி நம்பிக்கை | நடனத்தை கிண்டலடித்தவர்களுக்கு உருக்கமாக கோரிக்கை வைத்த ஜிமிக்கி கம்மல் நடிகை | பிரபாஸ் படத்திற்காக மகாபலிபுரத்தில் முகாமிட்டுள்ள தமன் | இல்லாத மகளைப் பற்றி மகன் கேட்டால் என்ன சொல்வேன்? - நவ்யா நாயர் கிண்டல் | ரிவால்வர் ரீட்டா படப்பிடிப்பு நிறைவு | பகலறியான்: ஒரே இரவில் நடக்கும் கதை | 'லயன் கிங்' அடுத்த பாகம் தயாராகிறது: டிசம்பரில் ரிலீஸ் | ரசவாதியில் சித்த வைத்தியரின் கதை : சாந்தகுமார் | எம்.ஜி.ஆர் மாதிரி செயல்படுவேன்: 10 டிராக்டர் வழங்கி ராகவா லாரன்ஸ் பேச்சு |
நடிகர் கமல்ஹாசனின் மூத்த மகளான ஸ்ருதிஹாசன் மும்பையில் அவரது காதலருடன் லிவிங் டு கெதர் ஆக வசித்து வருகிறார். அவர் நடித்துள்ள 'சலார்' படம் இன்னும் சில தினங்களில் வெளியாக உள்ளது.
சமீபத்திய வீடியோ பேட்டி ஒன்றில் ஸ்ருதிஹாசன் ஒரு காலத்தில் அவருக்கு இருந்த குடிப்பழக்கம் பற்றி ஓபன் ஆகப் பேசியுள்ளார். “நான் கடந்த எட்டு ஆண்டுகளாக தெளிவாக இருக்கிறேன். நீங்கள் குடிக்காத போது பார்ட்டிகளில் மற்றவர்களைப் பொறுத்துக் கொள்வது கடினம். எனக்கு நிதானமாக இருப்பதுதான் சிறந்தது. இது ஒரு கட்டமாக இருக்கலாம், அல்லது உங்கள் வாழ்நாள் முழுவதும் இருக்கலாம்.
நான் போதைப் பொருட்களுக்கு ஒரு போதும் அடிமையானதில்லை. ஆனால், மது எனது வாழ்க்கையில் ஒரு பெரிய விஷயமாக இருந்தது. அது எனக்கு எந்த விதத்திலும் பாசிட்டிவ்வாக அமைந்ததில்லை. நான் எப்போதும் மது மயக்கத்தில் இருந்தேன், எனது நண்பர்களுடன் குடிக்க விரும்பினேன். பின்னர் அப்படிப்பட்ட நண்பர்களிடம் இருந்து விலகி இருக்க ஆரம்பித்தேன்,” என்று தெரிவித்துள்ளார்.
ஸ்ருதிஹாசனின் அந்த வீடியோ பேட்டி பல்வேறு விதமான செய்திகளாகப் பரவி, அதை வைத்து அவரை 'டிரோல்' செய்து வைத்தார்கள். அவற்றிற்கு பதிலளிக்கும் விதமாக, “எனது தெளிவைப் பற்றிப் பேசும் கட்டுரைகளால் என்னை அவமானப்படுத்த முயற்சிப்பது பலனளிக்காது. கடவுள் கனிவானவர், வாழ்க்கை நன்றாக இருக்கிறது. ஒவ்வொரு வெளியீட்டிற்கு முன்பாகவும் உண்மையற்ற எந்த எதிர்மறை வந்தாலும் அதைமாற்ற முடியாது,” என்று பதிவிட்டுள்ளார்.