காந்தாரா சாப்டர்-1 : நேஷனல் கிரஷ் ஆன ருக்மணி வசந்த்! | மீண்டும் ஹிந்தியில் கால் பதிக்கும் ராஷி கண்ணா! | 82 கோடி வசூல் : தெலுங்கு ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த ரிஷப் ஷெட்டி! | பிரதமருடன் நடிகர் ராம் சரண் சந்திப்பு | செருப்பு அணிந்து அபுதாபி மசூதிக்குள் சென்றாரா சோனாக்ஷி சின்ஹா? | 3வது முறையாக ரஜினி- நெல்சன் கூட்டணி இணையப்போகிறது? | மலையாளிகளிடம் அங்கீகாரம் தந்தது 'ராவண பிரபு' படம் தான் ; ரீ ரிலீஸ் குறித்து வசுந்தரா தாஸ் மகிழ்ச்சி | ஒரிஜினலை விட டீப் பேக் வீடியோவுக்கு வியூஸ் அதிகம் ; ஜிமிக்கி கம்மல் நடிகை விரக்தி | பண்ணை வீடு திருட்டு சம்பவம் ; துப்பாக்கி லைசென்ஸுக்கு விண்ணப்பித்த சங்கீதா பிஜ்லானி | சுஹர்ஷ் ராஜ் நடித்த மியூசிக் வீடியோ: அனூப் ஜலோடா, பாடகி மதுஸ்ரீ பாராட்டு |
சென்னையில் ஏற்பட்ட மழை வெள்ளம் காரணமாக ஏராளமான மக்கள் தண்ணீரில் தத்துளித்துக் கொண்டு வருகிறார்கள். இன்னும் கூட பல பகுதிகளில் மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், நடிகரும் மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவரான கமல்ஹாசன் நேற்று செய்தியாளர்களிடம் பேசும்போது, ‛‛மக்களுக்கு என்ன செய்வது என்பது தான் தற்போதைய பணி. அரசை குறை கூறுவது அல்ல. அரசு இயந்திரம் என்பது ஒரு கோடி பேருக்கு சென்று சேர்வது சாத்தியமில்லை. எதிர்காலத்தில் மழை பாதிப்பு இல்லாதபடி வல்லுநர்களுடன் இணைந்து திட்டங்கள் ஆய்வு செய்ய வேண்டும்'' என்று கூறியிருந்தார்.
இதையடுத்து கமல்ஹாசனின் இந்த கருத்துக்கு நடிகை கஸ்தூரி வெளியிட்டுள்ள ஒரு பதிவில், ‛‛தட் படுத்தே விட்டானய்யா மொமண்ட். மக்களுக்கு தம் அவதியை வெளியிட உரிமை இல்லையா. யாரும் வேண்டுமென்றே குறை சொல்ல விரும்பவில்லை. நன்றி சொல்லவே விரும்புவார்கள். அரசின் விளம்பர பிரச்சாரம் அளவிற்கு செயல்பாடு இருந்தால் நன்றி சொல்லவும் சென்னை தயங்காது'' என்று குறிப்பிட்டுள்ளார்.