Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

நான் ஆபாச பட நடிகையா? - திருப்பதியில் ரோஜா கண்ணீர்

05 அக், 2023 - 10:54 IST
எழுத்தின் அளவு:
Actress-Roja-tears-in-Tirupati

தெலுங்கு தேசம் கட்சியின் முன்னாள் அமைச்சர் பண்டாரு சத்யநாராயணா, ஆந்திர மாநில சுற்றுலா மற்றும் இளைஞர் நல மேம்பாட்டு துறை அமைச்சரான நடிகை ரோஜாவின் தனிப்பட்ட வாழ்க்கை முறையை இழிவுபடுத்தும் விதமாக பேசினார். இதற்கு ஆந்திர மகளிர் ஆணையம் சார்பில் கண்டனம் தெரிவித்து டிஜிபிக்கு புகார் அளித்தனர். இதனையடுத்து குண்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து முன்னாள் அமைச்சர் சத்திய நாராயணாவை நேற்று முன்தினம் கைது செய்தனர்.

இந்த நிலையில் திருப்பதி சென்ற ரோஜா இதுகுறித்து கண்ணீர் மல்க பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: அரசியல் ரீதியாக என்னை எதிர்கொள்ள முடியாததால் காழ்ப்புணர்ச்சியுடன் என்னை பற்றி அவதூறாக பேசுகிறார்கள். உலக அளவில் அனைத்து துறைகளிலும் பெண்கள் முன்னேறி கொண்டிருக்கிறார்கள். இந்த நாட்களில் கூட இன்னும் பெண்களை அடக்குவதிலேயே தெலுங்கு தேசம் கட்சி குறியாக இருக்கிறது. ஆதாரம் இல்லாத குற்றச்சாட்டுகள் பொய்யான விமர்சனங்களால் என் பெண்மையை கேவலப்படுத்தும் விதமாக பேசிய அவரை கூட ஆதரிக்கும் கட்சி தெலுங்கு தேசம்.

பெண் இனத்தையே அவமானப்படுத்தும் படியாக அவர் பேசினார். தெலுங்கு தேசம் கட்சியில் 10 ஆண்டுகள் இருந்தேன். அந்த கட்சியில் இருந்து வெளியே வந்தது முதல் என்னை தொடர்ந்து எத்தனை விதமாக அவமானப்படுத்த முடியுமோ அவ்வளவு தூரம் அவமானப்படுத்தி வருகிறார்கள். ஆபாச படத்தில் நடித்தேன் என்று என்னை சித்ரவதை செய்கிறார்கள். சட்டமன்றத்துக்குள்கூட 'மார்பிங்' செய்த சி.டி.க்களை காட்டினார்கள். ஆனால் இதுவரை அதை நிரூபிக்கவில்லை. நான் ஆபாச படத்தில் நடித்ததாக கூறும் சி.டி.க்கள் உங்களிடம் இருந்தால் பொதுமக்களிடம் வெளியிடுங்கள்.

ரெக்கார்ட் டான்ஸ் ஆடியதாகவும் , லாட்ஜூக்கு போனதாகவும், ப்ளூ பிலிமில் நடித்ததாக மாஜி அமைச்சர் என்னை பற்றி கூறியுள்ளார். உங்கள் வீட்டில் மனைவி, மகள், மருமகள்கள் உள்ளார்கள் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். நாளை இதேபோன்று உங்கள் வீட்டில் உள்ளவர்களையும் பேசுவார்கள் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

சினிமாவில் இருந்து அரசியலுக்கு வந்தால் இவ்வாறு பேசுவீர்களா? 1999ம் ஆண்டு தெலுங்கு தேசம் கட்சியில் இருந்தபோது அக்கட்சிக்காக தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டேன். அப்போது எனது கேரக்டர் சரியில்லை என புறக்கணிக்க வேண்டியது தானே. இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின்போது ரோஜா கண்ணீர் விட்டு அழுததால் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
ரஜினியை சந்தித்த வசந்த் ரவிரஜினியை சந்தித்த வசந்த் ரவி லியோ பட டிரைலரை பொதுவெளியில் திரையிட போலீஸ் அனுமதி மறுப்பு லியோ பட டிரைலரை பொதுவெளியில் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in