முரண்களை கடந்த முழுமையான அன்பு இது | கைவிடப்படும் விஜய் சேதுபதி, மணிகண்டன் வெப் தொடர்! | மலேசியாவில் ‛தி கோட்' படத்தின் இசை வெளியீட்டு விழா நடத்த திட்டம்! | யஷ் படத்தில் இணைந்த அஜித் பட நடிகை! | சூர்யா 44வது படத்தில் இணைந்த தனுஷ் பட நடிகர்! | நண்பரையே திருமணம் முடித்த ஸ்வேதா கெல்கே! வைரலாகும் புகைப்படங்கள் | விவசாயி, சூர்யவம்சம், கேப்டன் மில்லர் - ஞாயிறு திரைப்படங்கள் | சூர்யா படத்துக்கு இசையமைக்கும் சந்தோஷ் நாராயணன் | இப்போதும் நான் தான் வீட்டிற்கு பால் வாங்கி வருகிறேன் : பஹத் பாசில் | 'கருடன்' படத்திற்கு வியாபார வட்டத்தில் வரவேற்பு |
மாரி செல்வராஜ் இயக்கத்தில் வடிவேலு, உதயநிதி, பஹத் பாசில், கீர்த்தி சுரேஷ் ஆகியோர் நடிப்பில் வெளியான படம் மாமன்னன். தியேட்டரில் ஓடி முடித்து விட்ட இந்த படம் தற்போது ஓடிடி தளத்தில் வெளியாகி இருக்கிறது. இந்த நிலையில் இயக்குனர் பேரரசு அளித்துள்ள ஒரு பேட்டியில், ஒரு விமர்சனத்தை முன் வைத்திருக்கிறார். அவர் கூறுகையில், கமல்ஹாசன் முன்னிலையில் தேவர் மகன் படம் பற்றி பேசினார் மாரி செல்வராஜ். அந்த தேவர் சமூகத்திற்குள் என் அப்பா இருந்தால் எப்படி இருக்கும் என்பது தான் இந்த படம் என அவர் கூறினார். அதனால் இந்த படத்தில் வில்லனாக சித்தரிக்கப்பட்ட ரத்னவேல் வேடத்தில் நடித்த பஹத் பாசில் தேவர் சமூகத்தைச் சார்ந்தவர் என்பதை அவரே சொல்லிவிட்டார். ஆனால் இந்த படத்தில் நடித்துள்ள உதயநிதி அரசியலுக்கு வராமல் இருந்திருந்தால் ஜாதிய அடையாளத்தை வெளிப்படுத்தும் இந்த படம் அவருக்கு எந்த பிரச்சனையும் ஏற்படுத்தாது. ஆனால் அவருக்கு எல்லா சாதிக்காரர்களும் ஓட்டு போடுகிறார்கள். அதனால் இது போன்ற ஒரு சாதி படத்தில் அவர் நடித்தது ரொம்ப தவறு என்று தன்னுடைய விமர்சனத்தை முன் வைத்திருக்கிறார் இயக்குனர் பேரரசு.