கதைகளை புனைவதால் வருத்தம்: பாடகி சைந்தவி | மீண்டும் அயோத்தி மந்திர மூர்த்தி இயக்கத்தில் நடிக்கும் சசிகுமார்! | 4 மொழிகளில் திரைக்கு வரும் அமலாபாலின் ‛லெவல் கிராஸ்' | இந்தியன்-2 படத்தோடு வெளியாகும் இந்தியன்- 3 படத்தின் டிரைலர்! | சர்ச்சையாக பேசிய திமுக பேச்சாளர்: நடிகை ராதிகா புகார் | மோசடி வழக்கில் நயன்தாரா பட இயக்குனர் கைது | வித்தியாசமான ஹேர்ஸ்டைலுக்கு மாறிய கீர்த்தி சுரேஷ் | ரிலீஸ் செய்ய மறுத்த ஆத்திரத்தில் பேஸ்புக்கில் படத்தை வெளியிட்ட டொவினோ தாமஸ் பட இயக்குனர் | கார் விபத்தில் சிக்கிய லியோ நடிகரின் குடும்பம் ; உறவினர் ஒருவர் பலி | இயக்குனரின் கணவர் பேட்டியால் சிக்கலில் மம்முட்டி |
வம்சி இயக்கத்தில் ரவி தேஜா நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ' டைகர் நாகேஸ்வரா ராவ்'. நுபூர் சனோன், காயத்ரி பரத்வாஜ், ரேணு தேசாய் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் இப்படத்தை அபிஷேக் அகர்வால் நிறுவனம் தயாரிக்கின்றனர்.
உண்மை சம்பவத்தை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு இப்படம் உருவாகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இப்படம் ரவி தேஜா நடிப்பில் உருவாகும் முதல் பான் இந்திய படமாகும். தெலுங்கு, தமிழ், ஹிந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகிறது. ஏற்கனவே இந்த படம் வருகின்ற அக்டோபர் 20ம் தேதி அன்று வெளியாகும் என அறிவித்த நிலையில் இந்த படம் தள்ளி போவதாக கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் தகவல் பரவியது.
இந்த நிலையில் நேற்று படக்குழுவினர்கள் இது குறித்து தெரிவித்துள்ளனர். அதன்படி, " எந்த வித அடிப்படை காரணங்கள் இல்லாமல் சிலர் ' டைகர் நாகேஸ்வரா ராவ்' படம் தள்ளி போவதாக வதந்திகளை பரப்பி வருகின்றனர். ஏனெனில், எங்கள் படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது . அதனால் திரையரங்கு உரிமையாளர்கள் மத்தியில் எங்கள் படத்திற்கு முன்னுரிமை கொடுக்கப்படுகிறது" என தெரிவித்துள்ளனர். மேலும், ரிலீஸ் தேதியில் எந்த மாற்றமும் இல்லை வருகின்ற அக்டோபர் 20ம் தேதி அன்று வெளியாகும் என உறுதிப்படுத்தியுள்ளனர்.
இதற்கு ஒரு நாளுக்கு முன்பு தான் விஜய் நடிக்கும் லியோ, பாலகிருஷ்ணாவின் பகவந்த் கேசரி படங்கள் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.