விரைவில் 'பாகுபலி' அனிமேஷன் சீரிஸ் | 'சங்கமித்ரா' படம் உருவாகும், சுந்தர் சி நம்பிக்கை | நடனத்தை கிண்டலடித்தவர்களுக்கு உருக்கமாக கோரிக்கை வைத்த ஜிமிக்கி கம்மல் நடிகை | பிரபாஸ் படத்திற்காக மகாபலிபுரத்தில் முகாமிட்டுள்ள தமன் | இல்லாத மகளைப் பற்றி மகன் கேட்டால் என்ன சொல்வேன்? - நவ்யா நாயர் கிண்டல் | ரிவால்வர் ரீட்டா படப்பிடிப்பு நிறைவு | பகலறியான்: ஒரே இரவில் நடக்கும் கதை | 'லயன் கிங்' அடுத்த பாகம் தயாராகிறது: டிசம்பரில் ரிலீஸ் | ரசவாதியில் சித்த வைத்தியரின் கதை : சாந்தகுமார் | எம்.ஜி.ஆர் மாதிரி செயல்படுவேன்: 10 டிராக்டர் வழங்கி ராகவா லாரன்ஸ் பேச்சு |
மலையாள சினிமாவில் போதை பொருள் புழக்கம் அதிகமாக இருக்கிறது என்ற குற்றச்சாட்டு அடங்குவதற்குள் அடுத்த அதிரடியாக மலையாள சினிமாவில் வெளிநாட்டு கருப்பு பணம் புழங்குவதாக தகவல்கள் வந்துள்ளது. 4 தயாரிப்பு நிறுவனங்களில் அமலாக்கத்துறை நடத்திய திடீர் சோதனையில் மலையாள திரைப்பட நடிகரும், தயாரிப்பாளருமான ஒருவரிடம் இருந்து அமலாக்கத்துறை 25 கோடி ரூபாய் அபராதம் வசூலித்திருப்பதாகவும் தகவல்கள் வெளியானது. இந்த தகவல்களை வெளியிட்ட சில மலையாள ஊடகங்கள் மற்றும் யு டியூப் சேனல்கள் 25 கோடி ரூபாய் அபராதம் செலுத்தியது நடிகர் பிருத்விராஜ் என்று செய்தி வெளியிட்டன.
இது குறித்து பிருத்விராஜ் வெளியிட்ட பதிவு : ‛‛பொதுவாக இம்மாதிரியான செய்திகளை நான் கடந்து செல்வதே வழக்கம். ஆனால் எதற்கும் ஓர் எல்லை உண்டு. வரம்பு மீறிய இந்த அபாண்ட செய்திக்கு எதிராக சிவில் மற்றும் கிரிமினல் சட்ட நடவடிக்கைகளை தொடங்குகிறேன்” என கோபமாக அறிவித்துள்ளார்.