அம்மாவாக நடிப்பது பெருமை... வயது தடையில்லை : ஐஸ்வர்யா ராஜேஷ் | பிளாஷ்பேக்: கனவில் அறிமுகமாகி, காலம் இணைத்து வைத்த காதல் மனங்களின் “மனோன்மணி” | நயன்தாரா ஆவணப்படத்தில் 'சந்திரமுகி' காட்சிகள்: நஷ்டஈடு கோரி மேலும் ஒரு வழக்கு | கூலி படத்திற்காக இரண்டு ஆண்டுகளாக கடின உழைப்பை போட்ட லோகேஷ் கனகராஜ் | ‛டிமான்டி காலனி 3' படப்பிடிப்பை தொடங்கிய அஜய் ஞானமுத்து | முதல் படத்திலேயே அதிர்ச்சி தோல்வியை சந்தித்த சூர்யா சேதுபதி | டாக்சிக் படத்தில் இணைந்த அனிருத் | ‛இவன் தந்திரன் 2'ம் பாகம் படப்பிடிப்பு துவங்கியது | பூரி ஜெகன்னாத் படத்தில் விஜய் சேதுபதி; ஹைதராபாத்தில் துவங்கியது படப்பிடிப்பு | தயாரிப்பாளர் கே.ஜே.ஆர் ராஜேஷின் கதாநாயகனாக 2வது பட அறிவிப்பு |
இந்தியாவின் மிகப்பெரிய திரைப்பட விழாவான கோவா சர்வதேச திரைப்பட விழா தற்போது நடந்து வருகிறது. இதில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய 'ஜிகிர்தண்டா டபுள் எக்ஸ்' படம் திரையிடப்படுகிறது. இதோடு தற்போது 'ஆசான்' என்கிற குறும்படமும் திரையிடப்படுகிறது.
இந்த படத்தை சமீபத்தில் வெளியாகி விருதுகளை பெற்ற 'கட்டில்' படத்தை இயக்கிய இ.வி.கணேஷ் பாபு இயக்கி உள்ளார். ஸ்ரீ மலைமேல் அய்யனார் மூவிஸ் சார்பில் வனிதா தயாரித்துள்ளார், ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்திருக்கிறார், என்.கே.ராஜராஜன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இ.வி.கணேஷ்பாபு நாயகனாக நடித்திருக்கும் இந்த படத்தில் ராமன் அப்துல்லா, தஞ்சை அமலன், ஸ்ரீ ஆகியோர் நடித்துள்ளனர்
படத்தைப் பற்றி இயக்குனர் இ.வி.கணேஷ்பாபு கூறும்போது “உலகம் முழுவதிலிருந்தும் திரைப்பட ஆளுமைகள் இந்த விழாவுக்கு வருகை தருகிறார்கள். அவர்களது திரைப்படங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு திரையிடப்படுகிறது. இப்படி முக்கியத்துவம் வாய்ந்த சர்வதேச திரைப்பட விழாவில் எனது படமும், பங்கேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
சிறுவயதில் மாணவர்கள் செய்யும் குற்றத்திற்கு அவர்களை தண்டிப்பதை விட, அந்தத் தவறை உணரச் செய்வதின் மூலம் அவர்கள் வாழ்வை, ஒரு ஆசிரியரால் உயர்த்த முடியும் என்ற கதைக்கருவை மையமாகக் கொண்டு ஆசான் உருவாக்கப்பட்டு இருக்கிறது” என்றார்.