ஸ்பெயின் கார் பந்தயத்தில் மூன்றாமிடம்: அஜித் அணிக்கு உதயநிதி பாராட்டு | ‛மா இண்டி பங்காரம்' படப்பிடிப்பு இம்மாதம் துவக்கம்: சமந்தா வெளியிட்ட தகவல் | துணிக்கடை திறப்பு விழாவில் கூட்ட நெரிசலில் சிக்கிக்கொண்ட பிரியங்கா மோகன்! | 5 வருடத்திற்கு பிறகு பாஸ்போர்ட்டை திரும்பப்பெற்ற ரியா சக்கரவர்த்தி | ‛காந்தாரா சாப்டர் 1' வெற்றியை ஜெயசூர்யா வீட்டில் கொண்டாடிய ரிஷப் ஷெட்டி | 10க்கு 9 எப்பவுமே லேட் தான் ; இண்டிகோ விமான சேவை மீது மாளவிகா மோகனன் அதிருப்தி | பிரம்மாண்ட விழா நடத்தி மோகன்லாலை கவுரவித்த கேரள அரசு | வதந்திகளில் கவனம் செலுத்தவில்லை: காஜல் அகர்வால் | தள்ளி வைக்கப்படுமா 'லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி' ? | சூரியின் 'மண்டாடி' படப்பிடிப்பில் விபத்து: கேமரா கடலில் மூழ்கியது |
மலையாள சினிமாவின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர் நடிகை சம்யுக்தா. அதன் பிறகு தெலுங்கு படங்களில் நடித்து வந்தார். நடிகர் தனுஷின் வாத்தி படத்தின் மூலம் தமிழிலும் அறிமுகமானார் சம்யுக்தா. சமீபத்தில் நடிகர் சாய் தரம் தேஜ் உடன் சம்யுக்தா இணைந்து நடித்த படம் விருபாக்சா. தெலுங்கில் இப்பபடம் நல்ல வரவேற்பைப் பெற்றது .இதைதொடர்ந்து இப்படம் தமிழில் வரும் மே 5 அன்று வெளியாகவுள்ளது. அதற்காக நேற்று சென்னையில் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் சம்யுக்தா பேசியது; "இனிவரும் காலங்களில் பெண்களுக்கு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரங்கள் என்ற கேள்வியே வராத வகையில் நாம் முன்னோக்கி செல்ல வேண்டும். இங்கு நிறைய திறமையான நடிகைகள் உள்ளனர். அவர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் மாற்றம் வர வேண்டும் என்று தயாரிப்பாளர்கள், நடிகர்களிடம் கேட்டுகொள்கிறேன்" என தெரிவித்துள்ளார்.