20 வயது நடிகருடன் காதலா... : கீர்த்தி சுரேஷ் பதில் | 'இந்தியன் 3' படத்திற்காக மீண்டும் படப்பிடிப்பு | அஜித்துடன் மோதும் சிவகார்த்திகேயன்? | 'தி கோட்' - தன் வேலையை ஆரம்பித்த மந்திரவாதி | 25 கோடியுடன் முடிவுக்கு வரும் 'சர்பிரா'!!! | விஷாலுக்கு தயாரிப்பாளர்கள் சங்கம் போட்ட கடிவாளம் | தங்கலான் படத்திற்கு யு/ஏ சான்று | பொறாமைக்கு மருந்தே கிடையாது : இயக்குனர் செல்வராகவன் | ஹீரோ ஆன மகன் விஜய் ஸ்ரீ ஹரி : வனிதா நெகிழ்ச்சி பதிவு | ரீமேக் மாதிரியே இருக்காது : ரசிகரின் கேள்விக்கு ரவி தேஜா பட இயக்குனர் பதில் |
இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஜஸ்வர்யா ராய், த்ரிஷா, ஜஸ்வர்யா லட்சுமி உள்ளிட்டோர் இணைந்து நடித்துள்ள திரைப்படம் பொன்னியின் செல்வன்-2. கடந்த வெள்ளிக்கிழமை இந்த படம் வெளியானது.
இந்த படம் விமர்சகர்கள் மற்றும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. ஆனால், புத்தகம் படித்தவர்களுக்கு ஒரு சில காட்சிகள் மாற்றியமைத்ததால் வருத்தம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இந்த படம் வெளியாகி இரண்டு நாட்களில் உலகளவில் ரூ.100 கோடிக்கு மேல் வசூலித்து உள்ளதாக கூறப்படுகிறது. தமிழகத்தில் முதல் நாள் வசூலை விட இரண்டாம் நாள் வசூல் அதிகம் என்று கூறப்படுகிறது.