70வது பிலிம்பேர் விருதுகள் - அதிக விருதுகளை வென்ற 'அமரன்' | இது கமல் ரஜினி பட கணக்கு | சிறிய பட்ஜெட் படத்தை இயக்கும் சமுத்திரக்கனி! | ‛கல்கி 2898 ஏ.டி' படத்தின் படப்பிடிப்பு துவங்கியது! | பிரதீப் ரங்கநாதன் இயக்குனருடன் கைகோர்க்கும் சிம்பு! | அட..டா... மதுரை சாப்பாடு: அமீனா ரபீக் ஆனந்தம் | விஸ்மாயா மோகன்லால் கதாநாயகியாக அறிமுகமாகும் தொடக்கம் படப்பிடிப்பு நிறைவு | என்னுடைய படம் பார்க்க தனுஷ் வந்தது ஏன் ? ; மிருணாள் தாக்கூர் வெளிப்படை பதில் | சிறை எனக்கு ஐந்தாம் வீடு போல ; ஜாமினில் விடுதலையான இயக்குனர் விக்ரம் பட் விளக்கம் | ‛கேஜிஎப்' இசையமைப்பாளருக்கு 35 லட்சம் மதிப்புள்ள கோல்டு வாட்ச் பரிசளித்த விஸ்வக் சென் |

மலையாள சினிமாவின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர் நடிகை சம்யுக்தா. அதன் பிறகு தெலுங்கு படங்களில் நடித்து வந்தார். நடிகர் தனுஷின் வாத்தி படத்தின் மூலம் தமிழிலும் அறிமுகமானார் சம்யுக்தா. சமீபத்தில் நடிகர் சாய் தரம் தேஜ் உடன் சம்யுக்தா இணைந்து நடித்த படம் விருபாக்சா. தெலுங்கில் இப்பபடம் நல்ல வரவேற்பைப் பெற்றது .இதைதொடர்ந்து இப்படம் தமிழில் வரும் மே 5 அன்று வெளியாகவுள்ளது. அதற்காக நேற்று சென்னையில் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் சம்யுக்தா பேசியது; "இனிவரும் காலங்களில் பெண்களுக்கு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரங்கள் என்ற கேள்வியே வராத வகையில் நாம் முன்னோக்கி செல்ல வேண்டும். இங்கு நிறைய திறமையான நடிகைகள் உள்ளனர். அவர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் மாற்றம் வர வேண்டும் என்று தயாரிப்பாளர்கள், நடிகர்களிடம் கேட்டுகொள்கிறேன்" என தெரிவித்துள்ளார்.




