காமெடி முதல் கிரைம் த்ரில்லர் வரை : இந்த வார ஓடிடி ரிலீஸ்......! | வாரணாசி-க்கு பின்னணி இசை அமைப்பது எப்போது... : கீரவாணி கொடுத்த அப்டேட் | 'சர்வம் மாயா' நாயகிக்கு பாராட்டுடன் பரிசும் அனுப்பிய சூர்யா ஜோதிகா | நன்றி சொன்னார் எஸ்.பி.முத்துராமன் : கண்கலங்கினார் வி.சி.குகநாதன் | ஹனிரோஸுக்கு ஜிஎஸ்டி துறை அனுப்பிய நோட்டீசை தள்ளுபடி செய்த கேரள உயர்நீதிமன்றம் | நடிகர் ஜெயசூர்யாவின் 39 லட்சம் மதிப்புள்ள சொத்துக்களை முடக்கிய அமலாக்கத்துறை | கேரளா பிளஸ் 2 மாதிரி தேர்வில் மோகன்லாலின் சினிமா பயணம் குறித்து கேள்வி | அஞ்சு ரூபாய் டாக்டர் போன்ற கதாபாத்திரத்தில் நடிக்கும் மம்முட்டி | 'வேள்பாரி' வேலைகளில் தீவிரம் காட்டும் ஷங்கர் | பெரும் வரவேற்பைப் பெற்ற 'நாகபந்தம்' டீசர் |

பழம்பெரும் நடிகை எம்.என்.ராஜம், இயக்குனர் எஸ்.பி.முத்துராமனுக்கு 2024, 2025ஆம் ஆண்டுக்கான கலைத்துறை வித்தகர் விருதை தமிழக அரசு அறிவித்துள்ளது. இது குறித்து எம்என் ராஜமிடம் தினமலர் சார்பில் பேசினோம். அவர் கூறுகையில், ‛‛விருது அறிவிக்கப்பட்டது மகிழ்ச்சி. குறிப்பாக என்னை மறக்காமல் இவ்வளவு பெரிய கவுரவம் கொடுத்த தமிழக அரசு , விருது குழு, தமிழக முதல்வருக்கு நன்றி. சில மாதங்களுக்கு முன்பு வீடு தேடி வந்து என்னை வாழ்த்தி, பேசிவிட்டு சென்றார் முதல்வர். அதையும் என்னால் மறக்க முடியாது.
எனக்கும் கருணாநிதி மீது மதிப்பு, பாசம் உண்டு. அவர் வசனங்களை ரசித்து பேசிய நடிகைகளில் நானும் ஒருவள். ரங்கோன் ராதா உட்பட பல படங்களில் அது நடந்து இருக்கிறது. அதெல்லாம் பொற்காலம். உடல்நிலை காரணமாக வீட்டில் ஓய்வில் இருக்கிறேன். சமீபத்தில் நடிகர் சங்கத்தில் விருது கொடுத்தார்கள். நான் அதை நேரில் பெறும் வகையில் வீல் சேரில் சென்று வர ஏற்பாடு செய்து கொடுத்தார்கள். அந்த மாதிரி கலைஞர் விருது பெறவும் , வீல் சேரில் மேடைக்கு, அரங்கம் சென்று வரவும் ஏற்பாடு செய்து கொடுத்தால் கண்டிப்பாக நேரில் சென்று விருது பெறுவேன். இந்த விருது பெறுவது எனக்கும் பெருமை அல்லவா'' என்கிறார்.




