புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் | தன் படங்களின் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்குமார் | 'மஞ்சும்மேல் பாய்ஸ்' ஓடிடி உரிமை எவ்வளவு தெரியுமா? | நடிகை தமன்னாவுக்கு மும்பை சைபர் கிரைம் சம்மன் | ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? | விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் | ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ |
கே.பாக்யராஜின் மகன் சாந்தனு. சக்கரகட்டி படத்தின் மூலம் அறிமுகமானார். அதன்பிறகு சித்து பிளஸ் 2, கண்டேன், ஆயிரம் விளக்கு, வாய்மை, முருங்கைக்காய் சிப்ஸ் உள்பட பல படங்களில் நடித்தார். ஆனாலும் சாந்தனுவால் ஒரு ஹீரோவாக தன்னை நிலைநிறுத்திக் கொள்ள முடியவில்லை.
நீண்ட இடைவெளிக்கு பிறகு அவர் கதையின் நாயகனாக நடித்து உருவாகி உள்ள படம் இராவண கோட்டம். கண்ணன் ரவி தயாரிக்கிறார். கயல் ஆனந்தி முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க, மதயானைக் கூட்டம் புகழ் விக்ரம் சுகுமாறன் இந்தப் படத்தை இயக்குகிறார். பிரபு, இளவரசு, தேனப்பன், தீபா சங்கர், அருள்தாஸ் மற்றும் பலர் நடிக்கின்றனர். ஜஸ்டின் பிரபாகரன் இசை அமைக்கிறார்.
படம் பற்றி இயக்குன் விக்ரம் சுகுமாறன் கூறியதாவது: மதயானை கூட்டம் போன்றே இந்த படமும் ஒரு முக்கியமான சமூக பிரச்சினை பற்றி பேசுகிறது. சாந்தனுவுக்கு இது முக்கியமான படமாக இருக்கும் என்றார்.
ஒரே ஒரு வெற்றிக்காக காத்திருக்கும் சாந்தனுக்கு இந்த படம் வெற்றிப் படமாக அமையுமா என்பது இந்த ஆண்டின் துவக்கத்தில் தெரிய வரும்.