20 வயது நடிகருடன் காதலா... : கீர்த்தி சுரேஷ் பதில் | 'இந்தியன் 3' படத்திற்காக மீண்டும் படப்பிடிப்பு | அஜித்துடன் மோதும் சிவகார்த்திகேயன்? | 'தி கோட்' - தன் வேலையை ஆரம்பித்த மந்திரவாதி | 25 கோடியுடன் முடிவுக்கு வரும் 'சர்பிரா'!!! | விஷாலுக்கு தயாரிப்பாளர்கள் சங்கம் போட்ட கடிவாளம் | தங்கலான் படத்திற்கு யு/ஏ சான்று | பொறாமைக்கு மருந்தே கிடையாது : இயக்குனர் செல்வராகவன் | ஹீரோ ஆன மகன் விஜய் ஸ்ரீ ஹரி : வனிதா நெகிழ்ச்சி பதிவு | ரீமேக் மாதிரியே இருக்காது : ரசிகரின் கேள்விக்கு ரவி தேஜா பட இயக்குனர் பதில் |
முன்னணி நடிகையாக இருக்கும்போதே மயோசிடிஸ் நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார் சமந்தா. அவர் நடிக்க வேண்டிய சில படங்களில் இருந்து விலகி இருக்கிறார். அவரும் முழு ஓய்வெடுக்க முடிவு செய்திருந்தார், இப்போது அந்த முடிவை மாற்றிக் கொண்டு நடிக்க முடிவு செய்திருக்கிறார்.
அண்மையில் அவர் ஹிந்தி வெப் தொடர் ஒன்றில் நடிக்க மும்பை சென்றபோது அவர் கையில் ஜெபமாலை இருந்தது. அதன் பிறகு அவர் ஐதராபாத்தில் சாகுந்தலம் படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டபோதும் அவர் கையில் ஜெபமாலை வைத்திருந்தார்.
ஆங்கிலோ இந்திய பெண்ணான சமந்தா கிறிஸ்தவ மதத்தை சேர்ந்தவர். என்றாலும் அதில் அதிக ஈடுபாடு இல்லாதவராக இருந்தார். புத்தாண்டு, கிறிஸ்மஸ் தினங்களில் மட்டும் தேவாலயத்திற்கு சென்று வந்தார். தற்போது மன அமைதி வேண்டியும், உடல் ஆரோக்கியம் வேண்டியும் எப்போதும் பிரார்த்தனை செய்து வருகிறார். அதனால் ஜெபமாலையை எப்போதும் கையில் வைத்திருக்கிறார் என்கிறார்கள்.