விரைவில் 'பாகுபலி' அனிமேஷன் சீரிஸ் | 'சங்கமித்ரா' படம் உருவாகும், சுந்தர் சி நம்பிக்கை | நடனத்தை கிண்டலடித்தவர்களுக்கு உருக்கமாக கோரிக்கை வைத்த ஜிமிக்கி கம்மல் நடிகை | பிரபாஸ் படத்திற்காக மகாபலிபுரத்தில் முகாமிட்டுள்ள தமன் | இல்லாத மகளைப் பற்றி மகன் கேட்டால் என்ன சொல்வேன்? - நவ்யா நாயர் கிண்டல் | ரிவால்வர் ரீட்டா படப்பிடிப்பு நிறைவு | பகலறியான்: ஒரே இரவில் நடக்கும் கதை | 'லயன் கிங்' அடுத்த பாகம் தயாராகிறது: டிசம்பரில் ரிலீஸ் | ரசவாதியில் சித்த வைத்தியரின் கதை : சாந்தகுமார் | எம்.ஜி.ஆர் மாதிரி செயல்படுவேன்: 10 டிராக்டர் வழங்கி ராகவா லாரன்ஸ் பேச்சு |
கடந்த சில வருடங்களுக்கு முன்பு துருவங்கள் பதினாறு என்கிற வித்தியாசமான வெற்றி படத்தை கொடுத்து அறிமுகமானவர் இயக்குனர் கார்த்திக் நரேன். அதைத்தொடர்ந்து அவர் இயக்கிய நரகாசுரன் திரைப்படம் சில காரணங்களால் வெளியாகாமல் இருக்க, அடுத்தடுத்து அவர் இயக்கிய மாபியா, மாறன் ஆகிய படங்கள் பெரிய வரவேற்பை பெறவில்லை. இந்த நிலையில் தற்போது ‛நிறங்கள் மூன்று' என்கிற படத்தை இயக்கி வருகிறார் கார்த்திக் நரேன். அதர்வா கதாநாயகனாக நடிக்க இரண்டு முக்கிய வேடங்களில் சரத்குமார், ரகுமான் இருவரும் நடித்துள்ளனர்.
ஹைப்பர்லிங்க் திரில்லர் படமாக உருவாகியுள்ள இந்த படத்தில் ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கும் பாசிட்டிவ், நெகட்டிவ் மற்றும் கிரே என்கிற மூன்று நிறத்துக்கு சொந்தமான குணங்களை வெளிப்படுத்தும் விதமாக இந்த படம் உருவாகி வருகிறது. குணச்சித்திர நடிகர் ஜெயப்பிரகாஷின் மகன் துஷ்யந்த் படத்தில் முக்கிய வேடத்தில் அறிமுகமாகிறார்.
கடந்தாண்டு ஜனவரி மாதம் தொடங்கிய படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் தற்போது இந்த படத்தின் டப்பிங் பணிகளை முடிவடைந்து விட்டதாக அறிவித்து உள்ளார் கார்த்திக் நரேன். விரைவில் டிரைலர் குறித்த தேதியும் வெளியாகும் என்றும் கூறியுள்ளார்.