விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! | மே 1ம் தேதி ரீ ரிலீஸாகும் தீனா படம்! | கவின், ஆண்ட்ரியா படத்திற்கு இசையமைக்கும் ஜி.வி. பிரகாஷ்! | ஹாலிவுட்டில் ரீ ரிலீசாகிறது 'இன்டர்ஸ்டெல்லர்' | பெண்களை அடிமைப்படுத்தும் 'பரதா': சர்ச்சையுடன் உருவாகும் புதிய படம் | இணையத்தில் கசிந்த 'ராமாயணம்' படப்பிடிப்பு காட்சிகள்: படக்குழு அதிர்ச்சி | புதிய அமைப்பு தொடங்குகிறார் ராகவா லாரன்ஸ் |
திரைப்பட நடிகர் ஒய்.ஜி.மகேந்திரன் தொடர்ந்து மேடை நாடகங்களையும் நடத்தி வருகிறார். தற்போது சாருகேசி என்ற நாடகத்தை நடத்தி வருகிறார். கடந்த 26ம் தேதி இந்த நாடகம் நாரதகான சபாவில் நடந்தபோது ரஜினிகாந்த் தன் குடும்பத்தினருடன் நாடகத்தை பார்க்க சென்றார். கூட்டம் அதிகமாக இருந்ததால் நாடக குழுவை பாராட்ட முடியாமல் சென்று விட்டார். இதனால் நாடக நடிகர்களின் மனம் வருந்தப்பட்டிருக்கும் என்று கருதிய ரஜினி, நாடகத்தில் நடித்த அனைவரையும் தனது வீட்டிற்கு அழைத்து பாராட்டினார்.
இதுகுறித்து ஒய்.ஜி.மகேந்திரன் கூறியதாவது: உறவினர் என்பதை விட நல்ல நண்பராகத் தான் ரஜினிகாந்த் என்னோடு பழகி கொண்டு இருக்கிறார். குறிப்பாக எனது நாடகங்களுக்கு அவர் மிக பெரிய ரசிகர். சாருகேசி நாடகம் பற்றி நான் ஏற்கனவே அவரிடம் கூறியுள்ளேன். அவரது மனைவி மற்றும் மகளுடன் நாடகத்தை முழுமையாக பார்த்து நாடகம் முடிந்தவுடன் குழுவில் உள்ள அனைவரையும் வெகுவாக பாராட்டினார்.
இந்த நாடகத்தில் நான் மகேந்திரனை பார்க்கவில்லை, நடிகர் திலகம் சிவாஜி அவர்களை தான் பார்த்தேன் என்று கூறியதை விட பெரிய பாராட்டு எனக்கு வேறு எதுவும் இல்லை. மேலும் அன்று கூட்டம் அதிகமாக இருந்ததால் ரஜினிகாந்த் அவர்களால் அதிக நேரம் செலவிட முடியவில்லை. வீட்டுக்கு ஒரு நாள் அனைவரையும் அழைப்பதாக சொல்லி விட்டு சென்றார். சொன்னபடி எல்லோரையும் வீட்டுக்கு அழைத்து பாராட்டினார். என்றார்.