ரஜினியின் ‛கூலி' படத்தின் பத்து நாள் வசூல் வெளியானது! | பிளாஷ்பேக்: அபூர்வ கலைப் படைப்பாக வந்து, ஆச்சர்யமிகு வெற்றியைப் பதிவு செய்த “அஞ்சலி”யின் அனுபவ ஞாபகங்கள் | ‛பாகுபலி தி எபிக்' படம் குறித்து ராஜமவுலி வெளியிட்ட தகவல்! | சிவகார்த்திகேயனின் ‛மதராஸி' படத்தின் தியேட்டர் உரிமை குறித்த தகவல் வெளியானது! | 63வது பிறந்த நாளை கொண்டாடிய ராதிகா! | 'தலைவன் தலைவி' : 100 கோடி வசூல் என அறிவிப்பு | விஷால் 35வது படப் பெயர் 'மகுடம்' | இந்தியாவில் 400 கோடி வசூல் கடந்த 'சாயரா' | நடிகருக்கு கடிவாளம் போட்ட கேரள மனைவி | நல்ல காதல் கதை தேடும் பிருத்வி |
தற்போது மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துள்ள 'தக்லைப்' படம் வருகிற ஜூன் 5ம் தேதி திரைக்கு வருகிறது. இந்த நிலையில் கமல்ஹாசன் அளித்த ஒரு பேட்டியில், நடிப்பில் இருந்து எப்போது ஓய்வெடுப்பீர்கள்? என்று கேட்கப்பட்ட கேள்விக்கு அவர் பதிலளிக்கையில், ''சினிமாவை எல்லோரும் பொழுதுபோக்காகதான் பார்க்கிறார்கள். ஆனால் அது ஒரு சக்தி வாய்ந்த ஊடகம்.
நாங்கள் ஏற்று நடிக்கும் கதாபாத்திரங்கள் மூலம் சமூகத்தில் உள்ள குறைகளை சரி செய்ய முடியும். பொது மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த முடியும். அதை கருத்தில் கொண்டுதான் கதைகளை நான் தேர்வு செய்து நடிக்கிறேன். இதை ஒரு பொறுப்பாகவே நான் பார்க்கிறேன். மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்கிற அந்த தீ எனக்குள் தொடர்ந்து எரிந்து கொண்டே இருக்கிறது. அது அணையும் வரை நான் சினிமாவில் நடித்துக் கொண்டேதான் இருப்பேன்'' என்று பதில் கொடுத்திருக்கிறார் கமல்ஹாசன்.