ஹரிஹர வீரமல்லு படத்தின் தமிழக உரிமை விற்பனை | ராமின் பறந்துபோ படத்தை பாராட்டிய நயன்தாரா | ‛ஆப் ஜெய்சா கோய்' படத்தில் என் கேரக்டர் சவாலானது : மாதவன் | ரஜினி படத்தை இயக்குகிறாரா வினோத் | ரகசியத்தை சொன்ன சார்லி : மிரண்டு போன பன் பட்டர் ஜாம் படக்குழு | விஷ்ணு விஷால் மகளுக்கு அமீர்கான் பெயர் வைத்தது ஏன்? | சாய்பல்லவி, ஐஸ்வர்ய லட்சுமி, அதிதி வரிசையில் ஹீரோயின் ஆன டாக்டர் | மரபணு மாற்றப்பட்ட மனிதனின் கதை : ‛கைமேரா' அர்த்தம் இதுதான் | சூர்யாவுடன் நடிப்பது வாழ்நாள் கனவு: மீனாட்சி தினேஷ் | 'இந்தியன் 2, தக் லைப்' தோல்விகள் : 'இந்தியன் 3' எதிர்காலம் என்ன ? |
ஸ்ரீசூர்யா மூவிஸ் தயாரிப்பில், ஏ.எம்.ரத்னம் தயாரிக்க, பவன் கல்யாண் நடிப்பில் உருவாகியுள்ள படம் "ஹரி ஹர வீர மல்லு". இப்படத்தை ஜோதி கிருஷ்ணா இயக்கி உள்ளார். இதில் நிதி அகர்வால், பாபி தியோல், சத்யராஜ், நாசர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்ய, எம்.எம்.கீரவாணி இசையமைத்துள்ளார். தமிழ், தெலுங்கு உட்பட 5 மொழிகளில் பான் இந்தியா படமாக தயாராகியுள்ள இப்படம் வரும் ஜூன் 12ம் தேதி வெளியாக உள்ளது. ஏற்கனவே இப்படத்தில் இடம் பெற்றுள்ள இரண்டு பாடல்கள் வெளியாகி உள்ள நிலையில் படத்தின் 3வது பாடல் வெளியீட்டு விழா ஐதராபாத் நகரில் நடைபெற்றது.
இதில் ஹீரோயின் நிதி அகர்வால் பேசியதாவது: ‛‛எனக்கு மிகவும் சவாலான படமாக ஹரிஹர வீர மல்லு படம் இருந்தது. கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகள் வேறு எந்த படத்திலும் நடிக்காமல் இதற்காக மட்டும் தேதிகளை ஒதுக்கி நடித்துள்ளேன். அதற்கு இயக்குனர் மற்றும் தயாரிப்பாளரின் ஒத்துழைப்பு அதிகமாக இருந்தது.
பவன் கல்யாண் உடன் நடித்தது என் வாழ்க்கையில் எனக்கு கிடைத்த மிகப்பெரிய கிப்ட். அவ்வளவு அற்புதமான நடிகர், நல்ல கோ ஸ்டார். மனித நேயம் மிக்கவர். இந்த படம் வெளியான பிறகு என்னை தேடி பல வாய்ப்புகள் நிச்சயம் வரும். தமிழிலும் அடுத்ததாக ஒரு படத்தில் நடிக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. விரைவில் தமிழ்த் திரையுலகிளும் என்னை பார்க்கலாம்'' என்றார்.